ரூ.570 கோடி விவகாரம் சிபிஐ வசம்.. தேர்தல் எப்படி நடந்தது என்பதற்கு இதுவே சான்று: ஸ்டாலின்
சென்னை: திருப்பூர் அருகே கன்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் மூலம் நடந்து முடிந்த தேர்தல் எப்படி நடந்தது என்பது நிச்சயமாக வெளியாகும் என திமுக பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேபோல, ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று தமாகா தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான முக ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக சட்டசபை தேர்தலின் போது திருப்பூர் அருகே, கண்டெயினர் லாரிகளில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சட்டசபையில் பேச முயற்சி மேற்கொண்டேன். அப்போது சபாநாயகர் அதனை அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போது சிபிஐ விசாரணை வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இதன் மூலம் நடந்து முடிந்த தேர்தல் எப்படி நடந்தது என்பது நிச்சயமாக வெளியாகும் என்று கூறினார்.
இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபை தேர்தல் நேரத்தில் திருப்பூரில் ரூ. 570 கோடி கொண்டு சென்ற 3 கண்டெய்னர் லாரிகளை, தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர். திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையின் மூலம் உண்மை நிலை வெளிவரும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications