மனைவி பெயர் மறைப்பு- மோடிக்கு எதிரான வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் தள்ளுபடி!
சென்னை: சட்டசபை தேர்தல்களில் மனைவியின் பெயரை குறிப்பிடாத குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை, கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த வாராகி என்பவர், உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியுள்ளதாவது:

குஜராத் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நரேந்திர மோடி அந்த தேர்தல்களில் தனது மனைவி பெயரை குறிப்பிடவில்லை. ஆனால், தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனது மனைவி பெயர் ஜசோதா பென் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தல்களின் வேட்புமனுக்களில் மனைவியின் பெயரை மறைத்தது கிரினல் குற்றமாகும். குற்றவாளிக்கு அதிகபட்சமாக 6 மாதம் வரை சிறை தண்டனை அளிக்கலாம்.
எனவே, மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 20ந் தேதி மனு அனுப்பியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நரேந்திர மோடி மீது நடவடிக்கைக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ''மனுதாரர் தன்னுடைய கோரிக்கை மனுவை 20ந் தேதி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி விட்டு, மறுநாளே (21ஆம் தேதி) உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த வழக்கு குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே இருப்பதால், இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்'' என தீர்ப்பளித்தனர்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications