இலவச வீட்டு மனை பட்டா விவகாரம்.. சகாயம் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கோர்ட் நோட்டீஸ்
இலவச வீட்டு மனை பட்டா விவகாரத்தில் சகாயம் ஐஏஎஸ் அதிகாரிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை: இலவச வீட்டு மனை பட்டா விவகாரத்தில் சகாயம் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் பணிபுரிந்த போது 2012-ம் ஆண்டு 17 பேருக்கு திருப்பரங்குன்றம் நிலையூர் அருகே இடம் ஒதுக்கீடு செய்து இலவச பட்டாக்களை வழங்கினார். இதையடுத்து நிலையூர் இடத்தில் 17 பேரும் வீடு கட்டும் பணியை தொடங்கினர்.

ஆனால் இதற்கு நிலையூரில் கடும் எதிப்பு கிளம்பியது. இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவ்விசாரணையில் சகாயம் ஐஏஎஸ் கொடுத்த பட்டா செல்லாது என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக சகாயத்துக்குப் பின்னர் மதுரை மாவட்ட ஆட்சியரான சுப்பிரமணியத்திடமும் 17 பேரும் முறையீடு செய்திருக்கின்றனர். ஆனால் அரசு ஆவணங்களின்படி 17 பேருக்கும் நிலையூரில்தான் இடம் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது மாவட்ட ஆட்சியர் வீரராக ராவிடமும் இந்த பிரச்சனை சென்றிருக்கிறது. அவரும் நிலையூரில்தான் நிலம் இருக்கிறது என மீண்டும் அரசு தரப்பு பதிலாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கே.கே. ரமேஷ் என்பவர் ஆட்சியாளர்கள் உண்மைக்கு புறம்பான தகவலை வழங்கியதாக வழக்கு தொடர்ந்தார். 17 பேரும் தங்களுக்கு இழப்பீடும் கோரியிருந்தனர்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, சகாயம் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications