இலவச வீட்டு மனை பட்டா விவகாரம்.. சகாயம் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கோர்ட் நோட்டீஸ்
இலவச வீட்டு மனை பட்டா விவகாரத்தில் சகாயம் ஐஏஎஸ் அதிகாரிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை: இலவச வீட்டு மனை பட்டா விவகாரத்தில் சகாயம் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் பணிபுரிந்த போது 2012-ம் ஆண்டு 17 பேருக்கு திருப்பரங்குன்றம் நிலையூர் அருகே இடம் ஒதுக்கீடு செய்து இலவச பட்டாக்களை வழங்கினார். இதையடுத்து நிலையூர் இடத்தில் 17 பேரும் வீடு கட்டும் பணியை தொடங்கினர்.

ஆனால் இதற்கு நிலையூரில் கடும் எதிப்பு கிளம்பியது. இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவ்விசாரணையில் சகாயம் ஐஏஎஸ் கொடுத்த பட்டா செல்லாது என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக சகாயத்துக்குப் பின்னர் மதுரை மாவட்ட ஆட்சியரான சுப்பிரமணியத்திடமும் 17 பேரும் முறையீடு செய்திருக்கின்றனர். ஆனால் அரசு ஆவணங்களின்படி 17 பேருக்கும் நிலையூரில்தான் இடம் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது மாவட்ட ஆட்சியர் வீரராக ராவிடமும் இந்த பிரச்சனை சென்றிருக்கிறது. அவரும் நிலையூரில்தான் நிலம் இருக்கிறது என மீண்டும் அரசு தரப்பு பதிலாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கே.கே. ரமேஷ் என்பவர் ஆட்சியாளர்கள் உண்மைக்கு புறம்பான தகவலை வழங்கியதாக வழக்கு தொடர்ந்தார். 17 பேரும் தங்களுக்கு இழப்பீடும் கோரியிருந்தனர்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, சகாயம் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications