மதுரை ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்து காவல்துறை அதிரடி!
மதுரை: மதுரையில் அக்.8ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க காவல்துறைமறுப்பு தெரிவித்துள்ளது.
விஜயதசமியையொட்டி ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணிகளை நடத்துவது வழக்கம். வரும் 8ம் தேதி மதுரையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த பேரணியை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைப்பார் என போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்ட நிலையில், அதற்கு விளக்கம் அளித்த அமைச்சர், தனது அனுமதி இன்றியே இவ்வாறு போஸ்டர்கள் அடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

திராவிட அமைப்புகள் பலவும், இந்த பேரணிக்கு அனுமதிக்க கூடாது என்று, போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்திருந்தன. இதுகுறித்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கொடுக்க முடியாது என கூறியது. ஊர்வல வழியில் மருத்துவமனைகள் இருப்பதால் அனுமதி தர முடியாது என காவல்துறை கூறியது.
எனவே வழக்கை வரும் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், மதுரை துணை கமிஷனரும், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும் கலந்து ஆலோசனை நடத்தி, அன்றைய தினம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
பாஜகவின் தாய் அமைப்பு என்று கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications