மகன் மீது விழுந்து அவர் உயிரைக் காத்து தான் இறந்த கொத்தனார்.. சுற்றுச்சுவர் விபத்தில் உருக்கம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் உப்பரப்பாளையம் என்ற இடத்தில் நடந்த குடோன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒரு கொத்தனார் தனது மகன் மீது விழுந்து அவரது உயிரைக் காத்து தான் இறந்துள்ள உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.
அலாமதி அருகேயுள்ள உப்பரபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான 2 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இந்த சேமிப்பு கிடங்குகளின் அருகே புதிதாக மற்றொரு சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணியில் ஆந்திரா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கட்டுமான தொழிலாளர்கள் தங்குவதற்காக சேமிப்பு கிடங்கின் சுற்றுச்சுவரையொட்டி குடிசை வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இதில் குடும்பம், குடும்பமாக தொழிலாளர்கள் வசித்து வந்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென சுற்றுச்சுவர் இடிந்து குடிசை வீடுகளில் விழுந்து அமுக்கியது. இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். அனைவருமே ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இதில் 19 வயதான ஆந்திராவைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார்.
சம்பவம் குறித்து நாகராஜ் கூறுகையில், ஆந்திரா, பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்டோர் குடிசை வீட்டில் தங்கியிருந்து கட்டுமான வேலை செய்து வந்தோம். என்னுடைய தந்தை பண்டியா கொத்தனார் வேலையும், நான் சித்தாள் வேலையும் செய்தோம். 2 வாரத்திற்கு முன்னர்தான் நான் சொந்த ஊரிலிருந்து வேலைக்கு திரும்பி வந்தேன்.
சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் தொழிலாளர்கள் சிலர் சம்பளத்தை வாங்கிக்கொண்டு வெளியே சென்றிருந்தனர். என்னையும் சேர்த்து 12 பேர் குடிசை வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தோம். நள்ளிரவு பயங்கர சத்தத்துடன் காற்று மற்றும் பலத்த மழை இடைவிடாமல் பெய்துகொண்டே இருந்தது.
குடிசையிலிருந்து மழை நீர் சொட்ட, சொட்ட ஒழுகி என்னுடைய முகத்தில் விழுந்தது. இதனால் என்னுடைய தூக்கம் கலையும் நிலை ஏற்பட்டது. உடனே நான் துண்டை எடுத்து முகத்தை நன்றாக துடைத்துவிட்டு, மழை நீர் விழுந்தாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் முகத்தில் துண்டை போட்டுவிட்டு தூங்கினேன்.
அடுத்த சில நிமிடத்திற்குள் திடீரென ஓலை குடிசை வீடுகள் அனைத்தும் பெயர்ந்து அப்படியே சரிந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. உடனே சுதாரித்து வெளியே செல்வதற்குள் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து அமுக்கியது. இதைப் பார்த்த என்னுடைய தந்தை இடிபாடு என் மீது படாமல் இருப்பதற்காக முதுகால் தாங்கினார். இடிபாடுகளை நான் காலாலும், கையாலும் உதறி தள்ளிவிட்டு வெளியே வருவதற்கு முயற்சி செய்தேன். தொடர்ந்து போராடியும் இடிபாடுகளை என்னால் அகற்றிவிட்டு வெளியே வரமுடியவில்லை.
என்னுடைய தந்தையும் மயங்கிய நிலையில் என் மீது படுத்திருந்தார். உடனே என்னை காப்பாற்றும்படி கூப்பாடு போட்டு பார்த்தும் யாரும் உதவிக்கு வரவில்லை. என் மேல் தந்தை கிடந்ததால் இடிபாடுகள் எதுவும் என்மீது விழவில்லை. சிறிது நேரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டு என்ன நடந்தது என்றே தெரியாமல் அப்படியே மயங்கிவிட்டேன்.
மீண்டும் திடுக்கிட்டு எழுந்தபோது இடிபாடுகளை அகற்றம் செய்யும் பணி நடந்தது. உடனே நான் என்னுடைய கைகளை இடிபாடுகளுக்கு இடையே உயர்த்தி காப்பாற்றும்படி செய்கை காண்பித்தேன். உடனே என்னை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்துவிட்டார்கள்.
என்னுடைய தந்தை மற்றும் உடன் வேலை பார்த்தவர்கள் உயிரோடு இல்லை என்ற செய்தி அப்போதுதான் எனக்கு தெரிந்தது. இது மிகுந்த வேதனையையும், மன வருத்தத்தையும் தருகிறது என்றார் அவர்.
தன்னைக் கொடுத்து மகனைக் காத்த அந்த தந்தையின் செயல் அனைவரையும் உருக வைத்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications