ஜல்லிக்கட்டு மீதான தடையை கண்டித்து நாளை சென்னை சாஸ்திரிபவன் முற்றுகை: மே 17 இயக்கம்
சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையைக் கண்டித்து நாளை சென்னையில் மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவன் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜல்லிக்கட்டின் மீதான தடையையும், தேசிய இன பண்பாட்டின் மீதான அடக்குமுறையையும் அம்பலப்படுத்தியும் நாளை மாலை 4 மணியளவில் சென்னை சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.

இந்தியாவிடம் அடிமைப்பட்டு கிடக்கும் தேசிய இனங்களுக்கு கிடைக்கும் அவமானமே இது போன்ற நீதிமன்றத் தீர்ப்புகள். ஆகமவிதிகள் பண்பாடாகவும், பாரம்பரியமாகவும் தெரிகிற கண்களுக்கு எளிய மக்களின் பண்பாடுகள் உறுத்தவே செய்யும்.
பிராணி வதை என்றும், விபத்துச் சாவுகள் என்றும் பசப்பி தனது வன்மத்தினையும், வக்கிரத்தினையும், அடக்குமுறையையும் நம்மீது திணித்து நியாயப்படுத்துகிறது.
பாபர் மசூதி உடைப்புக்குக் கொடுத்த தீர்ப்பினை நாம் இன்னும் மறக்கவில்லை. ஒரு தேசிய இனத்தின அடையாளங்களை ஒடுக்கி அடக்கிவிடமுடியாது.
தமிழ்த்தேசிய இனமக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக சனநாயகக் குரலை வலிமையாக பதிவு செய்வோம். நாட்டு மாடுகளின் அழிவிற்கும் பன்னாட்டு நிறுவனங்களில் லாபத்திற்கும் செய்யப்படும் இந்த அநீதியை கண்டிப்போம்.
நாளைய முற்றுகைப் போராட்டத்தில் பங்கெடுக்க அனைவரையும் அழைக்கிறோம்.
இவ்வாறு திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications