திமுக விசுவாசிகளாக மாறி வருகின்றனர் அதிகாரிகள்.. திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு புகார்

அரசு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்காமல் திமுக உள்ளிட்ட கட்சிகளின் விசுவாசிகளாக இருப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சாடியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு அதிகாரிகள் பலரும் முழு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை; திமுக மற்றும் பிற கட்சிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரே போடாகப் போட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

சென்னையை அடுத்த சிங்கபெருமாள் கோவிலில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் சீனிவாசன் பேசியதாவது:

Minister Dinidgul Srinivasan slams TN Officials

அரசு அதிகாரிகள் மாநில அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவதில்லை. அரசு அதிகாரிகள் பலரும் திமுக மற்றும் பிற கட்சிகளுடன் தொடர்பில் இருக்கின்றனர்.

அண்மையில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ ஜியோ மிக பிரமாண்ட போராட்டத்தை சென்னையில் நடத்தி காட்டியது. இந்த மிரட்சியில்தான் சீனிவாசன் இப்படி பேசுவதாக கூறப்படுகிறது.

இந்த அரசாங்கத்தின் எதிர்காலத்தை நினைத்தபடியே அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக கோஷ்டிகள் விரைவில் இணையும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+