சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. அமைச்சர்கள் அவசர ஆலோசனை
சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக சென்னையில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனால் பல இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வானப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெளுத்துவாங்கும் மழையால் சாலை போக்குவரத்து ரயில் போக்குவரத்து என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை ஒட்டி, மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, உதயகுமார், பாண்டியராஜன் பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றுள்ள கூறப்படுகிறது.
மேலும் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், டி.ஜி.பி. ராஜேந்திரனும் ஆலோசனையில் பங்கேற்று உள்ளனர்.
சென்னையில் விடாமல் கன மழை பெய்வதால் மக்கள் பெரும் பீதி
— Oneindia Tamil (@thatsTamil) November 2, 2017
போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிப்பு
#ChennaiRains pic.twitter.com/EXKEgak7uj