மியாட் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் சாகவில்லை: அரசு விளக்கம்
சென்னை: ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மியாட் மருத்துவமனையில் நோயாளிகள் இறக்கவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மியாட் மருத்துவமனையில், மின்சாரம் இன்றியும், மழையால் ஜெனரேட்டர் பழுதானதாலும் ஆக்சிஜன் கிடைக்காமல், ஐசியூவில் இருந்த 18 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இதுகுறித்து ராதாகிருஷ்ணன், தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி: மியாட் மருத்துவமனை மிகவும் பெரியது. அங்கு 1000 நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும். வெள்ளம் வந்தபோது, பெரும்பாலான நோயாளிகள் கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டனர்.
எனவே, ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் யாரும் சாகவில்லை. சிகிச்சையின்போது பலன் கிடைக்காமல் இறந்த நோயாளிகளின் உடல்கள், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 18 உடல்களை பிரேத பரிசோதனை அறையில் பார்த்ததும், தப்பான தகவல் பரப்பப்பட்டுள்ளது. மியாட் மருத்துவமனையில் வெள்ளம் புகாமல் இருந்திருந்தால், அரசு மருத்துவமனைக்கு சடலங்கள் அனுப்பப்பட்டிருக்காது. அப்போது இப்படி பரபரப்பாக கூறப்பட்டிருக்காது.
வெள்ளம் புகுந்தபோது, மியாட் மருத்துவமனைக்கு அமைச்சர் சென்றிருந்தார். நானும் அவரோது பார்வையிட சென்றிருந்தேன். இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் சிலர் கூறுகையில், மியாட் மருத்துவமனையில், ஒரு எமர்ஜென்சி லைட் கூட இல்லை. பணத்தை பறிப்பதில்தான் குறியாக இருந்தனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, மருத்துவமனை பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications