இறந்தவரை அடக்கம் செய்யப் போய் மலைத் தேனீயிடம் மாட்டிக் கொண்ட மக்கள் - நாமக்கல்லில் பரபர!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இறந்தவரை அடக்கம் செய்ய சென்றவர்களை மலைத் தேனீக்கள் துரத்தி, துரத்தி கடித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அடுத்த, சேளூர் செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவர், கடந்த 15 ஆண்டுளாக நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இறந்தார்.

அதை தொடர்ந்து அவரது உறவினர்கள், நேற்று மயானத்தில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட புகை மூட்டத்தில் அருகிலிருந்த வேப்பமரத்தில் கூடு கட்டியிருந்த மலைத்தேனீக்கள் திடீரென கூட்டம் கூட்டமாக வந்து இறுதி சடங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களை துரத்தி துரத்திக் கொட்டியது.
குறிப்பாக வெள்ளை சட்டை அணிந்திருந்தவர்களை குறிவைத்து தாக்கியது. அதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்து, சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு நாலாபக்கமும் சிதறி ஓடினர்.
இதனால், 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 27 பேர் உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிலர் நாமக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு மணி நேரம் கழித்து பாண்டியனின் உடல் வைக்கபட்டிருந்த மயானத்துக்கு அருகில் இருந்த கரும்பு வெட்டப்பட்டு சாறுகளுடன் இருந்த காட்டுக்கு தீ வைக்கப்பட்டது.
அந்த புகையில் மலைத்தேனீக்கள் கூட்டைவிட்டு பறந்து சென்றன. அதை தொடர்ந்து மயானத்துக்கு சென்ற பாண்டியன் உறவினர்கள் வெள்ளை சட்டையை கழற்றி வைத்துவிட்டு இறந்தவர் உடலை அடக்கம் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
"மலைத்தேனீக்களை இரவு நேரத்தில் தான் அழிக்க முடியும்" என தெரிவித்த தீயணைப்பு வீரர்கள் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள ஊராட்சி நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications