பவானியில் அணை: கேரளாவை கண்டிக்காமல் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசு.. முத்தரசன் சாடல்
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசைக் கண்டிக்காமல் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார்.
கோவை: கொங்கு மண்டலத்தின் நீராதாரத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சியில் பவானி ஆற்றில் தடுப்பணைகள் கட்டும் கேரள அரசைக் கண்டிக்காமல் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் சாடியுள்ளார்.
தமிழகத்தின் நீராதாரத்தை சீர்குலைக்க முயலும் கேரள அரசைக் கண்டித்து திமுக, விவசாயிகள் சங்கத்தினர், த.மா.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட 21 கட்சிகள், இயக்கங்கள் கோவை, திருப்பூர், ஈரோட்டில் இன்று போராட்டம் நடத்தின. கோவை கா.க.சாவடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது அவர் கூறியதாவது:
காவிரி மேலாண்மை விவகாரம், முல்லைப் பெரியாறு அணை, மேக்கேதாட்டு அணை ஆகிய விவகாரங்களில் தலையிட்டு சுமுக தீர்வு காணாமல் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்டு 300-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
ஆனால் வெறும் 17 விவசாயிகளுக்கு மட்டும் தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது ஏற்புடையது அல்ல. உயிரிழந்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும்.
5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் கிடையாது என்று கூறுவது ஏற்க முடியாது. 1 கோடிக்கும் மேல் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாள்களாக உயர்த்தியதில் எந்த பயனும் இல்லை. ஏனென்றால், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு இன்னும் பணப்பட்டுவாடா செய்யவில்லை.
இவ்வாறு முத்தரசன் கூறினார்.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications