நரேந்திர மோடி சென்னை வருகை..3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை பல்கலைக்கழக நுற்றாண்டு அரங்கில், நானி பல்கிவாலா அறக்கட்டளை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்று பேசுகிறார். இதற்காக மோடி தனி விமானம் மூலம் குஜராத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு பிற்பகல் 3 மணியளவில் வருகிறார்.
அங்கிருந்து கார் மூலம் தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி மாநில அலுவலகத்துக்கு செல்கிறார். அங்கு கட்சியினருடன் ஆலோசனை நடத்திய பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் மாலை 6 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் கார் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு செல்லும் அவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் குஜராத் செல்கிறார்.
சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் - புத்தூரில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் அளித்த வாக்குமூலத்தில் தாங்கள் மோடியைக் கொலை செய்ய திட்டமிட்டதாகக் கூறியதன் விளைவாக அவருக்கு பல மடங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர் வருகையின்போது 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. மொத்தம் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இதில் அவர் செல்லும் பாதையில் மட்டும் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விமான நிலையம், பாஜக அலுவலகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
-
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications