தசரா பண்டிகை: சென்னையில் தாண்டியா நடனம் ஆடி வட இந்தியர்கள் கொண்டாட்டம்
தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை சவுக்கார்பேட்டையில் வடஇந்தியர்கள் விடிய விடிய தாண்டியா நடனம் ஆடி உற்சாகமாக கொண்டாடினர்.
சென்னை: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஜெயின் சமூக மக்கள் தாண்டியா நடனம் ஆடி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
நவராத்திரித் திருவிழாவின் ஒரு பகுதியாக சென்னை சவுகார்பேட்டையில் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகமாக தாண்டியா நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
தசரா பண்டிகையின் போது 10நாட்களும் துர்காதேவியை வழிப்பட்டால் தங்களது வேண்டுதல் நிறைவேறும் என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.

வட இந்தியாவில் தாண்டியா
நவராத்திரி பண்டிகை முன்னிட்டு, வட இந்தியாவில் தாண்டியா என்ற கோலாட்டம் நடன நிகழ்ச்சி 9 நாட்களும் நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.30 மணி வரை நடைபெறுகிறது.

பாரம்பரிய நடனம்
திருமணமான மற்றும் திருமணமாகாத இளம் பெண்கள், ஆண்கள் என்று ஆயிரக்கணக்கானோர் துர்கை உள்ளிட்ட பல்வேறு அம்மன் பாடல்களை ஒரு குழுவினர் பாடுவார்கள். அந்த பாடல்களுக்கு ஏற்ப, பாரம்பரிய நடனத்தை ஆண்களும், பெண்களும் வரிசையாக ஆடுவது வழக்கம்.

சென்னையில் தாண்டியா நடனம்
சென்னை சவுக்கார்பேட்டையில் வடஇந்தியர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். அங்கு வசிப்பவர்கள் தசாராவை குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொண்டாடுவது போல பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். விடிய விடிய தாண்டியா நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

உற்சாக நடனம்
10 நாள்கள் நடைபெறும் தசரா விழாவில் தினமும் இரவு முழுவதும் தாண்டியா ஆடி மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். வண்ண உடைகள் அணிந்து வடஇந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் தாண்டியா நடனம் ஆடியது காண்பவர்களையும் உற்சாகப்படுத்துகிறது.
தாண்டியாவிற்கு பரிசு
போட்டிபோட்டு தாண்டியா ஆடுவதில் சிறந்து நடனம் ஆடுபவருக்கு 10வது நாள் அன்று பரிசுகளும் பணமும் தரப்படும் என்று விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications