நீட் குறித்து அரசு ஒரு முடிவுக்கு வர 100 உயிர்கள் தேவையோ?.. மக்கள் குமுறல்!
நீட் தேர்வுக்கு இன்று மேலும் ஒரு மாணவி உயிரிழந்திருப்பது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: நீட் தேர்வுக்கு இன்று மேலும் ஒரு மாணவி உயிரிழந்திருப்பது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருச்சி மாவட்டம் சமயபுரத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 5 ஆம் தேதி விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் நீட் தேர்வால் தொடரும் மரணங்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில
|
இன்னும் எத்தனை உயிர்கள்
அனிதா...
பிரதீபா..
சுபஸ்ரீ...
இன்னும்
எத்தனை உயிர்களை
குடிக்கப்போகிறதோ..
காவிகளை
ஒழிக்காமல்
விடியாது வாழ்வு!
|
மனவேதனை
அடுத்த நீட் படுகொலை நம் தங்கை சுபஸ்ரீ மருத்துவ கனவெல்லாம் வேணாம் எங்க புள்ளைங்க உயிரோட இருந்தா போதும்னு நினைக்குற நிலைமைக்கு கொண்டுவருவது தான் ஆரியத்தின் யுக்தி... தமிழர்கள் வாய்மூடி கொண்டு அநீதியை வேடிக்கை பார்ப்பது தான் மனவேதனை அளிக்கிறது
|
அரசு பேருந்து ஓட்டுநர்
அனிதா,பிரதீபாவைத் தொடர்ந்து அடுத்ததாக நேற்றிரவு சுபஸ்ரீ'யை படுகொலை செய்திருக்கிறது நீட்.
சுபஸ்ரீயின் தந்தை அரசு பேருந்து ஓட்டுனர்.
|
என்ன செய்யப் போகிறோம்?
இன்று சுபஸ்ரீ.. என்ன செய்யப் போகிறோம்..??
|
தற்கொலை தீர்வு அல்ல
நீட் தேர்வில் தோல்வி திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை!
தற்கொலை தீர்வு அல்ல!
|
நீட் அரக்கன்
நீட் அரக்கனின் மற்றுமொரு உயிர்பலி,
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், திருச்சியில் சுபஸ்ரீ என்ற மாணவி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை.
|
ஒரு செஞ்சுரி உயிர்
#அனிதா
#பிரதிபா
#சுபஸ்ரீ
#ஹைதராபாத்தில்_ஒரு_உயிர்
#டெல்லியில்_ஒரு_உயிர்
"ஒரு செஞ்சுரி மாணவ/மாணவிகள் உயிர் வேண்டும்போல. இந்ந #நீட் தேர்வு தேவையா இல்லையா என்று அரசு ஒரு முடிவிற்கு வருவதற்கு"
#கொடுமை
#கையறு_நிலை
#நீட்தேர்வு