தமிழகத்தில் மழையே இல்லாமல் வெள்ளம்.. பாவமா? புண்ணியமா? சாபகேடா?
தமிழகத்தில் மழை பெய்யாமலேயே ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் மழை பெய்யாமலேயே ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் மழை பெய்யாமலேயே பல ஆறுகளிலும் ஆற்றங்கரையோரங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கரைபுரண்டோடும் காவிரி நீர் கரையோர கிராமங்களில் புகுந்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
வைகையில் வறட்சி
ஒரே மாநிலத்தில் கூட நாம் நீரைப்பங்கிட முயற்சி செய்யவில்லையென்றால் பக்கத்து மாநிலங்களிடம் சண்டைப்போடுவது எதற்கு?
|
நம்மள தாக்க வருது
திருச்சி உறையூரில்
காவிரி வெள்ளநீர் புகுந்தது
மக்கள் வெளியேற்றம்
எல்லாரும் பாதுக்காப்பான இடத்த நோக்கி ஓடுங்க!
அது நம்மள தாக்க வருது!
|
மழையே இல்லையாம்
அண்ணே #காவிரி'ல தண்ணி வருதுன்றாய்க.. #தாமிரபரணி'ல வருதுன்றாய்ங்க.. #பாலாறு'ல வருதுன்றாய்ங்க.. அதுக்கு பக்கத்து ஆறுல வருதுன்றாய்ங்க..
ஆனா #வைகை'ல மட்டும் தண்ணியே வரல மழையே இல்லையாம்
|
தனக்கு மிஞ்சினால் தான்
காவிரி
பவானி
தாமிரபரணி கரையோரம்
ஆயிரக்கணக்கான
தமிழக மக்கள், விவசாயிகள்
வீடுகள், பயிரிட்டுள்ள
நிலங்களில்
கூடுதலாக
திறந்த உபரி நீர் புகுந்தும்
கடைமடையில் இன்னமும்
நீர் ஏறாமல்
நஷ்டமடைந்து,
செய்வதறியாது
திகைத்துப் போயுள்ளனர்.
அவங்களுக்கு உதவுங்க!
தனக்கு மிஞ்சினால் தான் தானம்!
|
எப்போ வந்துச்சு?
பள்ளிப்பாளையத்திலும் சரி, திருச்சிலயும் சரி,மக்கள் காவிரி,கொள்ளிடத்த கண்காட்சி மாதிரி பாக்குறாங்க.கடைசியா எப்போ இவ்ளோ தண்ணி வந்துச்சு?
|
தலைமுறை தவறு
ஆக்கிரமிக்கபட்ட தன் எல்லைகளை தானே தேடி காவிரி ! கண்ணகியாக !!
ஈவ்டீசிங் செய்தது நம் தலைமுறை தவறு !!
|
அரசியல் செய்யாதே
என்னை வைத்து அரிசி உண்டாக்கு !
அரசியல் செய்யாதே -காவிரி இன்று வெள்(ள)ளை அறிக்கை தாக்கல் செய்கிறது !!
|
பாவமா,புண்ணியமா, சாபகேடா?
கனமழை வெள்ளம்
அடிச்சிகிட்டு போவூது!
ஆனால் தமிழ் நாட்டில
மட்டும்தான் மழையே
பெய்யாமல் வெள்ளம்
அடிச்சுகிட்டு போவூது.
தாமிரவருணி யல வெள்ளம்
காவேரியில் வெள்ளம்
பல கிராமங்களில் தண்ணீர்
புகுந்தது.
செய்த பாவமா / புண்ணியமா /
சாபகேடா?
|
கண்ணீர் தானடி!
கேரளா, கர்நாடகா கனமழை, வெள்ளம், அணைகளிலிருந்து தமிழகத்திற்கு
தண்ணீர் திறப்பாம்...
ஒரு லட்சம்
ரெண்டு லட்சம்
3 லட்சம் கன அடி
ஆனால்,
தமிழக விவசாய நிலத்தில் தண்ணீர் இன்றி
கண்ணீர் தானடி!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications