மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யலாம்.. சட்டசபையில் மசோதா தாக்கல்
மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் வகையில் சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னை: மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் வகையில் சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மேயரை மாநகராட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நடைமுறை நிறுத்தப்பட இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது சட்டசபை கூட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்று தொடர்ந்து நிறைய முக்கிய அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் மாநகராட்சி மேயர்களை மீண்டும் மக்களே தேர்வு செய்யும் வகையில் சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல் இனி மேயரை போல் நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவரையும் மக்களே தேர்வு செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
சட்டசபையில் இந்த மசோதாவை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்தார். இதனால் கடந்த சில வருடங்களாக நடைமுறையில் இருந்த கவுன்சிலர்கள் மேயரை தேர்ந்தெடுக்கும் வழக்கம் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் மேயர்கள், உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுவது தடுக்கப்படும். இதன் காரணமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சிறந்த நிர்வாக முறையை கொண்டு வர முடியும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் உள்ளாட்சி பணிகளை இதன் மூலம் விரைந்து முடிக்க முடியும். இதன் காரணமாகவே சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு உள்ளது என்றும் மசோதாவில் கூறப்பட்டு இருக்கிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications