நிர்மலா விவகாரம்: சிபிசிஐடி விசாரணையே போதும்... சிபிஐ தேவையில்லை - ஜெயக்குமார்
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை எதுவும் தேவையில்லை சிபிசிஐடி விசாரணையே போதுமானது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சிபிஐக்கு இணையானது சிபிசிஐடி என்று கூறிய அவர், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனைக்கு ஆளாவார்கள் என்றார்.
அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளிடம் மதிப்பெண்களுக்காக, உயர் அதிகாரிகளுடன் அட்ஜஸ்ட் செய்து போக வேண்டும் என்று பேசிய ஆடியோ ஊடகங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்கள், மகளிர் அமைப்பினரின் போராட்டத்தை அடுத்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.
பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறான வழியில் நடத்த முயற்சித்ததாக வந்த தகவலை அடுத்து, பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ அமைப்பு இதுகுறித்து விசாரணை நடத்தினால்தான் உண்மைகள் வெளியாகும் என்று கூறினார். எதிர்கட்சியினர் பலரும் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்திய நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் உண்மை நிலை கண்டறிந்து யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கபடும். சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் என்றும் ஜெயக்குமார் கூறினார். இந்த விவகாரத்தில் யாருக்குத் தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை. சிபிஐக்கு இணையானது சிபிசிஐடி என்று கூறிய அவர், பெண் நிருபரின் கன்னத்தை ஆளுநர் தட்டியது பற்றி கருத்து கூறவில்லை. ஆளுநர் மாளிகைதான் கருத்து தெரிவிக்க முடியும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications