Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில்களுக்கான 'முன்பதிவில்' இனிமேல் அரை டிக்கெட் இல்லை- 5 முதல் 12 வயதினருக்கும் முழு கட்டணம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயில்களுக்கான முன்பதிவில் 5 முதல் 12 வயது வரையிலானோருக்கு 'அரை டிக்கெட்' என்ற முறையை ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ரயில்களில் முன்பதிவின் போது தற்போது 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு டிக்கெட் இல்லை. 5 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அரை டிக்கெட் என பாதி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

traincharge

தற்போது இந்த முறையில் ரயில்வே நிர்வாகம் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதன்படி படுக்கை வசதி அல்லது இருக்கை வசதிக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, அதில் இடம்பெறும் 5 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான அரை டிக்கெட் முறை ரத்து செய்யப்படுகிறது.

இனிமேல் அவர்களுக்கு முழு டிக்கெட் வழங்கப்படும். முன்பதிவுக்கான விண்ணப்ப படிவத்தில் இதற்கான திருத்தம் செய்யப்படுகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது. அவர்கள் தொடர்ந்து இலவசமாகவே பயணம் செய்யலாம்.

அன்ரிசர்வ்டு பெட்டியில் பயணிப்போர் தங்களது 5 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு அரை டிக்கெட் பெறலாம். அதில் மாற்றம் செய்யப்படவில்லை. இத் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+