எத்தனை சித்துவேலைகள் செய்தாலும் ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை கலைக்க முடியாது.. ஓபிஎஸ் பேச்சு
எத்தனை சித்து வேலைகள் செய்தாலும் ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை கலைக்க முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சேலம்: எத்தனை சித்துவேலைகள் செய்தாலும் ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை கலைக்க முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கருப்பூரில் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மாவட்டம் என்பதால் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் எம்ஜிஆரை மக்கள் வாத்தியார் என அழைத்ததை நினைவு கூர்ந்தார்.

படங்கள் மூலம் கற்றுக்கொடுத்தார்
எம்ஜிஆர் தனது திரைப்படங்கள் மூலம் நற்பண்புகளை கற்றுக்கொடுத்தவர் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில்தான் தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது என்றும் அவர் கூறினார்.

யாரும் சிதைத்து விட முடியாது
தமிழக மக்களின் நலனைக் கெடுக்க சில சுயநலவாதிகள் முயற்சிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார். ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார் என்றும் இதனை யாரும் சிதைத்து விட முடியாது என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மக்களின் ஒரே ஆயுதம்
எத்தனை சித்துவேலைகள் செய்தாலும் ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை கலைக்க முடியாது என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் தீய சக்திகளை அழிக்க மக்களுக்கு உள்ள ஒரே ஆயுதம் அதிமுக தான் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

மக்களின் ஆதரவு பெற்ற ஆட்சி
தீய குணம் கொண்டவர்கள் சிலர் ஆட்சியை கலைக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்., மக்களின் ஆதரவு பெற்ற ஆட்சியை யாராலும் அழிக்க முடியாது என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications