அம்மா பெட்ரோல் பங்குகளால் எந்த பயனும் இல்லை - ஏ.வ. வேலு
அம்மா பெட்ரோல் பங்குகளால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை என்று முன்னாள் அமைச்சரும் திமுக எம்எம்ஏவுமான ஏ.வ. வேலு கூறியுள்ளார்.
சென்னை: தினசரியும் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்து வரும் நிலையில் அம்மா பெட்ரோல் பங்குகளினால் எந்த பயனும் ஏற்படாது என்று முன்னாள் அமைச்சர் ஏ.வ வேலு கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று உணவுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வாசித்தார். அதில் மாநிலம் முழுவதும் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி, சென்னையில் நந்தனம், தஞ்சை இரும்புத்தலை, திருவாரூர் சுந்தரக் கோட்டை, வேலூர் வாணியம்படி, நாகை கோவில்பத்து, மதுரை கப்பலூர், விழுப்புரம் வானூர், கரூர் கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட இடங்களில் அம்மா பெட்ரோல் நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து நுகர்பொருள் வாணிபக் கழகம் வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதியதாக அம்மா பெட்ரோல் நிலையங்களையை அறிவித்துள்ளார் அமைச்சர் காமராஜ்.
இதனிடையே இது குறித்து கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.வ. வேலு, அம்மா பெட்ரோல் நிலையங்களினால் எந்த பயனும் இல்லை என்று கூறினார். தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் நிறுவனங்களே விலைநிர்ணயம் செய்யும் நிலையில் அம்மா பெட்ரோல் பங்குகளால் எந்த பயனும் இல்லை என்றும் கூறினார்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications