இடதுசாரிகளுக்கு வடசென்னை, நாகை, கோவை? 3 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் மாறுவார்கள்?
அதிமுகவின் தொகுதிப் பங்கீட்டு குழுவிடம் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 10 தொகுதிகளை குறிப்பிட்டு அதில் 3 தொகுதிகளைப் பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதியும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை, தென்காசி, சிவகங்கை தொகுதிகளை குறி வைத்து காத்திருக்கிறது.
அனேகம் இதில் தா. பாண்டியனுக்காக வடசென்னை தொகுதி மட்டுமே ஒதுக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது. அதேபோல் மார்க்சிஸ்ட் கட்சிக்கு நாகை, கோவை தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த லோக்சபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வடசென்னை, நாகப்பட்டினம், தென்காசி தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இதனால் வடசென்னை- வெங்கடேஷ் பாபு, தென்காசி- வசந்தி முருகேசன், சிவகங்கை- செந்தில்நாதன் ஆகிய அதிமுக வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படலாம் எனவும் கூறப்படுகிறது.