கூவத்தூர் ரகசியம் பற்றி பேசிய கருணாஸுக்கு குறியா? தூசி தட்டப்படும் புகார்கள்!
போலீசார் தற்போது கருணாஸை குறிவைத்துள்ளனராம்.
Recommended Video

சென்னை: திமுகவின் மாதிரி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்று கூவத்தூர் ரகசியங்களை அம்பலப்படுத்துவேன் என பேசிய எம்.எல்.ஏ. கருணாஸ் மீதான பழைய புகார்கள் தூசு தட்டப்படுவதாக ஆளும் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் மாதிரி சட்டசபை கூட்டத்தை நடத்தினார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். இந்தக் கூட்டத்தில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கருணாஸும் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் வரும் என்றால், கூவத்தூர் ரகசியத்தைப் பற்றிப் பேசுவதற்கும் தயங்க மாட்டேன்' எனக் கூறியிருந்தார். கருணாஸின் இந்தக் கருத்து குறித்து நம்மிடம் பேசிய ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர், " ராமநாதபுரம் மாவட்டம் உள்பட சில தொகுதிகளில் சசிகலாவுக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது.

தனி ஆவர்த்தனம்
இதை மனதில் வைத்துத்தான், தொடக்கத்தில் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தார் கருணாஸ். ஒருகட்டத்தில், தினகரன் ஆதரவு இருந்தால்தான் சமுதாய வாக்குகள் கிடைக்கும் என்பது தவறான நிலைப்பாடு. என்னுடைய சமுதாய வாக்குகள் அனைத்தும் எனக்கே வந்து சேரும். இதற்கு சசிகலா குடும்பத்தின் தயவு தேவையில்லை' என்பதைப் புரிந்து கொண்டு செயல்படத் தொடங்கினார்.

ஸ்டாலினுடன் நெருக்கம்
'வரக்கூடிய தேர்தலில் தி.மு.க அணியில் இருந்தால் வெற்றி வாய்ப்பு உறுதி' எனக் கணக்குப் போட்டவர், ஸ்டாலினுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினார்.
இதே அணுகுமுறையில்தான் தமிமுன் அன்சாரியும் இருக்கிறார்.

மேற்கு மாவட்ட லாபி
தனியரசுவும் சூழலுக்கு ஏற்ப செயல்பட முடிவெடுத்திருக்கிறார். மேற்கு மாவட்ட லாபியைப் பகைத்துக் கொண்டால், வெற்றி வாய்ப்பு கடினம் என்பதை தனியரசு உணர்ந்து வைத்திருக்கிறார். அதனால்தான் சில விஷயங்களில் மௌனம் சாதிக்கிறார்.

கைது செய்யப்படுகிறார் கருணாஸ்?
இப்போது அரசை நேரடியாக விமர்சித்துப் பேசி வருகிறார் கருணாஸ். 'கூவத்தூர் ஆப்ரேஷனில் அவர் பெற்றுக் கொண்ட பணத்தைப் பற்றிக் கட்சி நிர்வாகிகளிடம் சொல்லவில்லை' என கூறி முக்குலத்தோர் புலிப்படை அமைப்பே இரண்டு துண்டுகளாகச் சிதறியது. இந்தப் பணம் குறித்துப் பேசிய கருணாஸ், ' தேர்தல் செலவுக்கு வாங்கிய கடனுக்கு இந்தப் பணத்தை ஈடுகட்டிவிட்டேன். என்னிடம் வேறு எந்தப் பணமும் இல்லை' எனக் கூறியதாகத் தகவல் வெளியானது. கருணாஸ் மீது அவர் கட்சி நிர்வாகிகள் கூறிய பழைய புகார்களையும் காவல்துறை அதிகாரிகள் தூசி தட்டி வருகின்றனர். அவரையும் அவரது அமைப்பில் உள்ள சிலரையும் வளைப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. விரைவில் கருணாஸ் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
-
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
காத்து எங்க பக்கம் வீசுது.. கையை உயர்த்திய சண்முகம்! கைகோர்த்த வேலுமணி! எடப்பாடிக்குத் தான் சிக்கலே! -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
மந்தையில் இருந்து பிரிந்த 3 ஆடுகள்..நொறுங்கிய அதிமுக! இனி விஜய்க்குதான் நல்ல காலம்! எப்படி தெரியுமா? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
தாய் சிறுத்தைக்கு ஷாக்..திமுகவுக்கு தாவும் குட்டி சிறுத்தைகள்! ‘யோசிக்கும்’ தலையும் ’ஊர்’ புள்ளியும் -
சினிமா போல ஒரே நாளில் நாட்டை மாற்ற முடியாது.. நடிகர் விஜய் குறித்து மதுரையில் வையாபுரி பேட்டி -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
“மாணிக்கம் தாகூர் சொல்வது அப்பட்டமான பொய்.. காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள்”.. விளாசிய திமுக! -
உதயசூரியன் வேண்டாமா? எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு போங்க.. ஜவாஹிருல்லாவிற்கு திமுக எதிர்ப்பு












Click it and Unblock the Notifications