இந்த 2 நிபந்தனைகளை நிறைவேற்றினால் கூட்டணி.. அல்லது தேர்தல்தான்: ஓ.பி.எஸ் டீம் கறார்
கட்சி பொறுப்பிலிருந்து விலகி விட்டதாக, சசிகலா, தினகரனிடம் ராஜினாமா கடிதங்களை பெற வேண்டும். ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரி எடப்பாடி பழனிச்சாமி அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால், 2 நிபந்தனைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதனால் இரு அணிகள் நடுவேயான பேச்சுவார்த்தை குறித்த நகர்வுகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முனுசாமி முன்வைத்த இரு கோரிக்கைகள் இவைதான்.

அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா என தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தை எடப்பாடி பழனிச்சாமி வாபஸ் பெற வேண்டும்.
கட்சி பொறுப்பிலிருந்து விலகி விட்டதாக, சசிகலா, தினகரனிடம் ராஜினாமா கடிதங்களை பெற வேண்டும். இதையடுத்து சசிகலா, தினகரனுடனும் அவரது குடும்பத்தாருடனும் யாரும் தொடர்பு வைக்க கூடாது என ஜெயலலிதா பாணியில், அறிவிக்க வேண்டும். அதை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டும்.
ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரி எடப்பாடி பழனிச்சாமி அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். இதன்பிறகுதான் குழு அமைப்பது, பேச்சுவார்த்தை நடத்துவது போன்றவை நடக்கும்.
இந்த அடிப்படை கோரிக்கை நிறைவேறாமல் அவர்களுடன் பேசி பலனில்லை. பன்னீர்செல்வத்தை தங்கள் பக்கம் வைத்துக்கொண்டால், மக்கள் ஆதரவு கிடைக்கும் என எடப்பாடி தரப்பு நினைக்கிறது. ஆனால் அதற்கு நாங்கள் பலிகடாவாக முடியாது. இப்போது தேர்தல் நடந்தாலும், பன்னீர்செல்வத்தைதான் மக்கள் முதல்வராக்குவார்கள். ஸ்டாலின் எல்லாம் முதல்வர் பதவிக்கான ரேஸிலேயே கிடையாது. இவ்வாறு முனுசாமி தெரிவித்தார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications