திவாகரன் கல்லூரியில் 3வது நாளாக சோதனை... வினாத்தாள்களையும் விட்டு வைக்கவில்லை!
மன்னார்குடியில் உள்ள திவாகரன் கல்லூரியில் 3வது நாளாக சோதனை நடந்து வரும் நிலையில் மாணவர்களின் வினாத்தாள்களையும் அதிகாரிகள் சோதித்தனர்.
மன்னார்குடி: மன்னார்குடி அருகே சுந்தரகோட்டையில் திவாகரனுக்கு சொந்தமான செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்ட வினாத்தாள்களையும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை முடிவுற்றுள்ள நிலையில், அவருக்கு சொந்தமான மன்னார்குடி சுந்தரக்கோட்டையில் உஉள்ள செங்கமலத்தாய் கல்லூரியில் மூன்றாவது நாளான வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
ஷிப்ட் முறையில் அதிகாரிகள் மாறி மாறி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், இதனால் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

கேள்வித்தாளையும் ஆராய்ந்தனர்
இந்நிலையில் கல்லூரிக்கு தற்போது செமஸ்டர் தேர்வு காலம் என்பதால் இன்று காலையில் திருச்சி பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து செங்கமலத்தாயார் கல்லூரிக்கு வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கட்டுக் கட்டாக கொண்டு வரப்பட்ட அந்த சீலிடப்பட்ட வினாத்தாள்களை கல்லூரி வாசலிலேயே இறக்கி வைத்து அதிகாரிகள் ஒவ்வொரு கட்டாக பிரித்து சோதனை செய்தனர்.

பஸ்ஸை நிறுத்தி
வினாத்தாள் கொண்டு வந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஊழியர்களிடம் அடையாள அட்டையை பரிசோதித்த அதிகாரிகள் வினாத்தாள்களில் ஏதேனும் மறைத்து கொண்டுவரப்பட்டுள்ளதா என்றும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்கிறது சோதனை
திவாகரனின் பெரும்பாலான பணப்பரிவர்த்தனை இந்த கல்லூரியின் மூலம் நடந்திருப்பதாக வருமான வரித்துறையினர் சந்தேகிப்பதால் தொடர்ந்து அதிகாரிகள் வந்து சோதனை நடத்திய வண்ணம் உள்ளனர்.

கல்லூரி ஊழியர்களுக்கு சிக்கல்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மதிப்பிழந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் இந்தக் கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்களின் வங்கிக் கணக்கு மூலம் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது. எனவே இன்று விடுமுறை நாளாக இருந்தாலும் ஊழியர்கள் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications