விதியை மீறி மீன்பிடித்த படகுகளுக்கு ஒரு மாதம் மீன்பிடிக்க தடை.. அதிகாரிகள் அதிரடி!
தூத்துக்குடியில் விதியை மீறி மீன்பிடித்த படகுகளுக்கு மீன்பிடிக்க ஒரு மாதம் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
தூத்துக்குடி: கடலில் விதியை மீறி மீன்பிடித்த படகுகளுக்கு மீன்பிடிக்க ஒரு மாதம் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் 200க்கும் அதிகமாக விடைப்படகுகள் உள்ளன. இந்த படகுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக இரவில் தங்கி மீன்பிடிக்க அனுமதி இல்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடலில் மீன்பிடி குறைவாக இருப்பதால் இரவில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டு படகு மீனவர்கள் தங்கள் தொழில் பாதிக்கப்படும் என கூறி கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் காரணமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதிகாலை வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது.
165 படகுகள் தங்கு கடல் மீன்பிடி தொழிலுக்கு தேவையான பொருட்களுடன் சென்றதாகவும் கூறப்படுகிறது. இது உத்தரவை மீறிய செயல் என்பதால் இந்த 165 படகுகளுக்கும் அதிகாரிகள் ஒரு மாதம் கடலில் மீன்பிடிக்க அதிரடி தடை விதித்தனர்.
காலை விசைப்படகுகள் திரும்பி வரும் கால்வாயின் குறுக்கே இரும்பு ரோப் மூலம் தடுப்பு அமைத்தனர். இதனால் விசைப்படகுகள் கால்வாய் பகுதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தை கேள்விபட்ட சக மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும் மீன்வளத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications