கந்துவட்டி தொல்லையால் தேனியில் தம்பதிகள் விஷமருந்தி தற்கொலை - தொடரும் கந்துவட்டி விபரீதம்
கந்துவட்டி கொடுமையால் தேனியில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
தேனி : கந்துவட்டி கொடுமை காரணமாக தேனி மாவட்டத்தில் கணவன், மனைவி இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். மீண்டும் தொடரும் கந்துவட்டி தற்கொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியில் வசித்து வந்த தம்பதியினர் வீரணன், பாப்பாத்தி. இவர்களது மகன்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். முதியவர்களான இவர்கள் இருவரும் நேற்று மதியம் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

சில ஆண்டுகளுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும், இரண்டே முக்கால் லட்சத்திற்கும் மேல் வட்டியுடன் அசலும் கட்டியும் விடாமல் அவர் தொல்லை செய்ததாகவும் தெரிகிறது. மேலும் குடியிருக்கும் வீட்டை எழுதி வாங்கிக்கொண்டு வீட்டை காலி செய்யக்கோரி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக உடல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து போடி காவல்துறை துணைக்காணிப்பாளார் பிரபாகரன், சின்னமனூர் காவல் ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications