கிணற்றை கொடுப்பது போல் கொடுத்துவிட்டு தனியாருக்கு விற்ற ஓபிஎஸ்- மீண்டும் போராடும் லட்சுமிபுரம்!
பெரியகுளம் அருகே தனக்கு சொந்தமான கிணற்றை மக்களுக்கு இலவசமாக கொடுப்பதாக அறிவித்துவிட்டு பின்னர் அதற்கு முந்தைய நாளில் அந்த கிணற்றையும், நிலத்தையும் தனியாருக்கு விற்று மக்களை ஓபிஎஸ் ஏமாற்றிவிட்டதாக புகா
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 200 அடி ஆழ ராட்சத கிணற்றை பொதுமக்களுக்கு இலவசமாக கொடுப்பதாக தெரிவித்துவிட்டு அதற்கு முந்தைய நாளில் அந்த கிணற்றை வேறு நபருக்கு விற்றதன் மூலம் மக்களை ஓ.பன்னீர் செல்வம் ஏமாற்றிவிட்டார் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் மாநிலம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. நீர் ஆதாரங்களான விளங்கிய ஏரிகளும் வறண்டு விட்டன.

மக்கள் போராட்டம்
இதனால் மக்கள் அன்றாடம் காலி குடங்களுடன் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. மேலும் தண்ணீர் பஞ்சத்தை போக்காத தமிழக அரசைக் கண்டித்து ஆங்காங்கே போராட்டமும் நடைபெற்று வருகிறது.

ராட்சதச கிணறு
இதனிடையே தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த லட்சுமிபுரம் கிராம மக்கள், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான ராட்சத கிணற்றால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். இந்த கிணற்றை ஒப்படைக்க வேண்டி கிராம மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஏமாற்றிய ஓபிஎஸ்
இதையடுத்து கிணற்றை கிராம மக்களுக்கு அன்பளிப்பாக தரவிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவர் வாக்குறுதி அளித்ததற்கு முந்தைய நாளே கிணறு மற்றும் நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒருவருக்கு ஓபிஎஸ் விற்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

மீண்டும் போராட்டம்
இதனால் கிணற்றை கிராம பஞ்சாயத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று லட்சுமிபுரம் கிராம மக்கள் இன்று போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பை சமாளிக்க கிணற்றை கொடுப்பது போல் கொடுத்துவிட்டு அதை வேறு ஒருவருக்கு எழுதி வைத்ததது தந்திரம் என்று கிராமமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications