தினகரனுக்கு எதிராக பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் போர்க்கொடி! ஈபிஎஸ் அணியில் இருப்பதாக தகவல்!
தினகரனுக்கு எதிராக பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் போர்க்கொடி! ஈபிஎஸ் அணியில் இருப்பதாக தகவல்!
சென்னை: அதிமுகவின் துணைப் பொதுச்செயலராக தினகரனை சசிகலா நியமித்தது தவறு என திடீரென பண்ருட்டி ராமச்சந்திரன் போர்க்கொடி தூக்கியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா தலைமையை ஏற்றுக் கொண்டவர்களில் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரனும் ஒருவர். அதிமுகவில் ஓபிஎஸ் கலகக் குரல் எழுப்பிய நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் அமைதி காத்து வந்தார்.
குறிப்பாக அதிமுகவின் துணைப் பொதுச்செயலராக தினகரன் நியமனத்துக்குப் பின்னர் தீவிர அரசியலில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் ஒதுங்கியே இருந்தார். அண்மையில் கூட தினகரன் அணியில் பண்ருட்டி ராமச்சந்திரன் இணையப் போவதாகவும் கூறப்பட்டு வந்தது.

பண்ருட்டி திடீர் பேட்டி
கடந்த 6 மாத கால அரசியல் துறவறத்துக்குப் பின் இன்று கடலூரில் திடீரென செய்தியாளர்களை சந்தித்தார் பண்ருட்டி ராமச்சந்திரன். அப்போது அவர் கூறியதாவது:

து.பொ.செயலர் சரி அல்ல
அதிமுகவின் துணை பொதுச்செயலராக தினகரனை சசிகலா நியமித்தது தவறு. அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆட்சியும் கட்சியும்
தற்போது அதிமுகவும் ஆட்சியும் ஓபிஎஸ், ஈபிஎஸ் வசம்தான் உள்ளது. அவர்களது அணியில்தான் நான் இருக்கிறேன்.

ஒருபோதும் நடைபெறாது
தமிழக அரசு பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. தமிழகத்தை பாஜக ஒருபோதும் ஆளவே முடியாது.
இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications