தண்ணீர், மின்சாரம் இல்லை.. பள்ளிகளை அவசர கதியில் திறப்பதா? பெற்றோர் கொந்தளிப்பு
இயல்பு நிலை திரும்பாமலேயே சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் பள்ளிகளைத் திறக்க பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளை அவசர கதியில் இன்று திறந்ததற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வரலாறு காணாத பேரழிவை வர்தா புயல் ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகரில் பல்லாயிரக்கணக்கான மரங்களை வேரோடு சாய்த்துவிட்டு சென்றுள்ளது வர்தா புயல்.

பள்ளி, கல்லூரி வளாகங்கள் அனைத்தும் மரங்கள் சாய்ந்து வனப் பகுதிகளாகிவிட்டன. அத்துடன் சென்னை, சென்னை புறநகர் பகுதிகளில் தண்ணீரும் இல்லை... மின்சாரமும் இல்லை..தொலைத் தொடர்பு வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடந்த பின்னரும் இன்னமும் இயல்பு நிலைக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்ட மக்கள் திரும்பவில்லை. பல இடங்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மின்சாரமும் தண்ணீரும் இல்லாத நிலையில் பிள்ளைகளை எப்படி பள்ளிக்கு அனுப்புவது என்பதுதான் பெற்றோர் கேள்வி. ஏன் இந்த அவசரகோலத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும்? அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது என்பதை வெளிப்படுத்தவா இந்த நடவடிக்கை என்பதும் பெற்றோர் கேள்வி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications