2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மருத்துவர்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் போராட்டம் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் போராட்டம் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து அனைத்து மருத்துவர்களும் மாலை 5 மணிமுதல் சென்ட்ரல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் சிகிச்சையளிக்க ஆள் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

நோயாளிகள் பாதிக்கப்படுவதால் மருத்துவர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வலியுறுத்தி நோயாளிகளின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் மருத்துவர்கள் தாக்கியதாக கூறி பத்திரிக்கையாளர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். சென்னையின் முக்கிய சாலையான பூந்தமல்லி நெடுஞ்சாயில் நீடித்த இந்தப் போராட்டத்தால் போக்கு வரத்து முடங்கியது. அலுவலகம் முடிந்து வீடு திரும்புவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு வரிசைக்கட்டி நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ஒருவழியாக மருத்துவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications