விடுதலை கோரி பேரறிவாளன் மத்திய அரசுக்கு கடிதம்… தொடரும் போராட்டம்
26 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் தன்னை விடுதலைச் செய்ய வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறையில் உள்ளனர். கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களின் விடுதலை இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. மேலும், மத்திய அரசும் மாநில அரசும் இவர்களின் விடுதலை விஷயத்தில் சற்று மெத்தனமாகவே நடந்து கொள்கின்றன என்ற குற்றச்சாட்டும் பரவலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் தொடர்ந்து பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார். பேரறிவாளனும் மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். என்றாலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்று கூறி அனைத்து நடவடிக்கைகளும் கிடப்பில் இருக்கின்றன.
இந்நிலையில், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு பேரறிவாளன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பேரறிவாளன் அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
அண்மையில், வேலூர் சிறையில் இருக்கும் போது, சக கைதி ஒருவரால் பேரறிவாளன் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications