அன்று உணர்வோடு பெரியாரும் அண்ணாவும் முன்வைத்தது திராவிட நாடு இதுதான்!
மாட்டிறைச்சிக்கு தடை என்கிற நிலையில் தமிழகம் கேரளம் கர்நாடகம் ஆகிய பகுதி மக்கள் மத்தியில் திராவிட நாடு கோஷம் டிவிட்டர் பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் பற்றி எரிகிறது. இந்த நிலையில் 'திராவிட நாடு ' என்பதி
சென்னை: சமூக வலைத்தளங்களில் ஒரே நாளில் 'திராவிட நாடு' முழக்கம் பெருத்த அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் மோடி தலைமையில் ஆளும் பாஜக அரசு கடிவாளம் இல்லா குதிரையாக இந்திய மக்களின் எல்லா வகை நிலைகளிலும் வாய்வைத்துக் கடித்துக் குதறிவருகிறது. இதற்கு உதாரணமாக இருப்பதுதான் மாடுகள் விற்பனைக்கு தடை என்பது. இது வெறும் விலங்குகள் மீது அபிமானம் கொண்டு, முறைப்படுத்தும் சட்டம் என்று அமைதியாக ஒதுங்கிடமுடியாது.
பல தரப்பட்ட மக்களின் ஒருங்கிணைந்த தேசமாக இருப்பதுதான் இந்தியா. அதில் ஒருபகுதி மக்கள் அல்லது ஒரு மொழி பேசும் மக்களின் பழக்க வழக்கங்களை, கலாசாரத்தை ஒட்டுமொத்த தேசம் முழுக்க திணிப்பது மிகப் பெரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்திட கூடும் என்று அச்சம் தெரிவிக்கிறாரகள் அரசியல் நோக்கர்கள்.

டிவிட்டர் வாசிகளின் திராவிட நாடு
இந்த நிலையில் திராவிட நாடு டிவிட்டரில் ட்ரெண்டாகியுள்ளது கவனிக்கத்தக்க விஷயம். இது மத்திய பாஜக அரசுக்கு எதிராக தென் இந்திய மக்கள் திரண்டு வருவதை வெளிப்படுத்துகிறது.

கேரளாவுக்கு மாட்டிறைச்சி இல்லை
தமிழகத்தில் இருந்து மாடுகள் கேரளாவுக்கு வருவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள மாநிலத்தவர் கொதிக்கிறார்கள் என்று கூறப்பட்டாலும் திராவிட நாடு என்று அவர்கள் கூறுவது மிக முக்கியமான ஒன்றாகும்.

திராவிட நாடு பற்றி பெரியார்
இந்தியாவில் ஜின்னா தலைமையில் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையைத் துவக்கிய அதே காலத்தில் திராவிடர் கழகமும் தனிநாடு கோரிக்கையை உயர்த்திப் பிடித்தார் பெரியார்.

பெரியாரின் திராவிட நாடு
1938-ல் முதலாவது இந்தி எதிர்ப்பு போரின் முடிவில் சென்னை மெரினா கடற்கரை பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் தனித் தமிழ்நாடு முழக்கத்தை முன்வைத்தார். இதன் பின்னர் 1940-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி திருவாரூாில் நடைபெற்ற 15-வது நீதிக்கட்சி மாநாட்டில் , திராவிடர்களுடைய கலை, நாகாரீகம், பொருளாதாரம் ஆகியவைகள் முன்னேற்றமடைவதற்கு, பாதுகாப்பதற்கு, திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் இந்திய மந்திாியின் நேரடிப் பார்வையின்கீழ் ஒரு தனிநாடாகப் பிாிக்கப்பட வேண்டும்‘ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியார் கேட்ட திராவிட நாடு சென்னை மாகாணத்தை தனிநாடாக்குவது என்பது.

அண்ணாவின் திராவிட நாடு
ஆனால் அண்ணாதான் தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய திராவிட நாடு கோரினார். அந்த திராவிட நாடு கோரிக்கைதான் இப்போது பேசப்பட்டு வருகிறது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications