அன்று உணர்வோடு பெரியாரும் அண்ணாவும் முன்வைத்தது திராவிட நாடு இதுதான்!
மாட்டிறைச்சிக்கு தடை என்கிற நிலையில் தமிழகம் கேரளம் கர்நாடகம் ஆகிய பகுதி மக்கள் மத்தியில் திராவிட நாடு கோஷம் டிவிட்டர் பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் பற்றி எரிகிறது. இந்த நிலையில் 'திராவிட நாடு ' என்பதி
சென்னை: சமூக வலைத்தளங்களில் ஒரே நாளில் 'திராவிட நாடு' முழக்கம் பெருத்த அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் மோடி தலைமையில் ஆளும் பாஜக அரசு கடிவாளம் இல்லா குதிரையாக இந்திய மக்களின் எல்லா வகை நிலைகளிலும் வாய்வைத்துக் கடித்துக் குதறிவருகிறது. இதற்கு உதாரணமாக இருப்பதுதான் மாடுகள் விற்பனைக்கு தடை என்பது. இது வெறும் விலங்குகள் மீது அபிமானம் கொண்டு, முறைப்படுத்தும் சட்டம் என்று அமைதியாக ஒதுங்கிடமுடியாது.
பல தரப்பட்ட மக்களின் ஒருங்கிணைந்த தேசமாக இருப்பதுதான் இந்தியா. அதில் ஒருபகுதி மக்கள் அல்லது ஒரு மொழி பேசும் மக்களின் பழக்க வழக்கங்களை, கலாசாரத்தை ஒட்டுமொத்த தேசம் முழுக்க திணிப்பது மிகப் பெரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்திட கூடும் என்று அச்சம் தெரிவிக்கிறாரகள் அரசியல் நோக்கர்கள்.

டிவிட்டர் வாசிகளின் திராவிட நாடு
இந்த நிலையில் திராவிட நாடு டிவிட்டரில் ட்ரெண்டாகியுள்ளது கவனிக்கத்தக்க விஷயம். இது மத்திய பாஜக அரசுக்கு எதிராக தென் இந்திய மக்கள் திரண்டு வருவதை வெளிப்படுத்துகிறது.

கேரளாவுக்கு மாட்டிறைச்சி இல்லை
தமிழகத்தில் இருந்து மாடுகள் கேரளாவுக்கு வருவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள மாநிலத்தவர் கொதிக்கிறார்கள் என்று கூறப்பட்டாலும் திராவிட நாடு என்று அவர்கள் கூறுவது மிக முக்கியமான ஒன்றாகும்.

திராவிட நாடு பற்றி பெரியார்
இந்தியாவில் ஜின்னா தலைமையில் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையைத் துவக்கிய அதே காலத்தில் திராவிடர் கழகமும் தனிநாடு கோரிக்கையை உயர்த்திப் பிடித்தார் பெரியார்.

பெரியாரின் திராவிட நாடு
1938-ல் முதலாவது இந்தி எதிர்ப்பு போரின் முடிவில் சென்னை மெரினா கடற்கரை பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் தனித் தமிழ்நாடு முழக்கத்தை முன்வைத்தார். இதன் பின்னர் 1940-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி திருவாரூாில் நடைபெற்ற 15-வது நீதிக்கட்சி மாநாட்டில் , திராவிடர்களுடைய கலை, நாகாரீகம், பொருளாதாரம் ஆகியவைகள் முன்னேற்றமடைவதற்கு, பாதுகாப்பதற்கு, திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் இந்திய மந்திாியின் நேரடிப் பார்வையின்கீழ் ஒரு தனிநாடாகப் பிாிக்கப்பட வேண்டும்‘ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியார் கேட்ட திராவிட நாடு சென்னை மாகாணத்தை தனிநாடாக்குவது என்பது.

அண்ணாவின் திராவிட நாடு
ஆனால் அண்ணாதான் தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய திராவிட நாடு கோரினார். அந்த திராவிட நாடு கோரிக்கைதான் இப்போது பேசப்பட்டு வருகிறது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications