அரசு மருத்துவமனையில் மருந்தகங்களை கணிணிமயமாக்க கோர்ட் உத்தரவு!
தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்களை வரும் 6 மாதத்திற்குள் கணினிமயமாக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் மருந்தகங்களை வரும் 6 மாதத்திற்குள் கணிணிமயமாக்க உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் 20 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 32 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 240 தாலுகா மருந்தகங்கள் உள்ளன.

இதில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் புறநோயாளிகளும், 20 லட்சம் உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தேவையான மருந்துகள் அனைத்தும் தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.
மருந்து, மாத்திரைகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள 7 சிகிச்சை பிரிவுகளிலும் 7 மருந்தகங்கள் உள்ளன. ஆனால் 2016 அக்டோபர் முதல் நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படவில்லை. சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயாளிகளுக்கு மருந்து தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான நேரங்களில் உள் நோயாளிகளுக்கு கூட வெளியில் காசு கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. எனவே உயிர் காக்கும் விலை உயர்ந்த மருந்து, மாத்திரைகள் தேவையான இருப்பு வைக்கவும், அனைத்து காலி பணியிடங்களை நிரப்பவும், மருந்தகங்களை கணிணிமயமாக்கவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம் மற்றும் கலையரசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அரசு மருத்தகங்களில் தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பு வைக்கவும், அனைத்து காலி பணியிடங்களை நிரப்பவும், மருந்தகங்களை கணிணி மயமாக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த பணிகளை வரும் 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications