அடுத்த 2 நாட்களுக்கு சென்னையை மயக்குமாம் மழை...!
சென்னை: சென்னையில் தற்போது இரவு நேரத்தில் பெய்து வரும் மழையும், பகல் நேரத்தில் கண்ணாமூச்சி ஆடும் மேகமூட்டமும் அடுத்த 2 நாட்களுக்குத் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் முழுவதும் சென்னையில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும் கூட இரவு நேரங்களை மழை வந்து நனைத்து விட்டுப் போனது. இதனால் பகலில் புழுங்கிய மக்கள் இரவில் குளிர்ந்து போயிருந்தனர்.
இந்த மழை காரணமாக வெப்ப நிலையும் சற்று குறைந்து வருகிறது. இது அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கான அறிகுறி...
இதுகுறித்து சென்னை பிராந்திய வானிலை மைய துணை இயக்குநர் எஸ்.பி. தம்பி கூறுகையில், செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்திலும், அக்டோபர் தொடக்கத்திலும் வெயில் படிப்படியாக குறைந்து மழைக்காலத்தின் அறிகுறி காணத் தொடங்கியுள்ளது.

ஆயத்தநிலை...
தென் மேற்குப் பருவ காலம் முடிந்து, வட கிழக்குப் பருவ காலத்தின் தொடர்ச்சியாக இதைப் பார்க்கலாம். விரைவில் மழைக்காலம் தொடங்கவுள்ளதால் இதுபோன்ற ஆயத்த நிலை ஏற்படுவது வழக்கம்தான்.

மழை சீராகும்...
வழக்கமாக பருவ காலத்தின் தொடக்கத்தில் பகலிலும், இரவிலும் மாறி மாறி மழை பெய்யும். பருவ மழைக்காலம் தொடங்கி விட்டால் மழை அளவு சீராகும். பொதுவாக வட கிழக்கு பருவ காலத்தின்போது இரவு நேரத்தில் அதிக அளவில் மழை பெய்யும்.

கூடுதல் மழைக்கு வாய்ப்பு...
அக்டோபர் மத்தியில் மழைக்காலம் தொடங்கும். இந்த சமயம் வழக்கத்தை விட கூடுதலான மழைக்கு வாய்ப்பு உள்ளதால் மக்கள் மகிழ்ச்சியுடன் மழைக்காலத்தை வரவேற்க முடியும்.

வடகிழக்குப் பருவ மழை...
சென்னையைப் பொறுத்தவரை வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில்தான் அதிக அளவிலான மழைப் பொழிவைப் பெறுகிறது. எனவே சென்னைக்கு இது முக்கியமானதாகும்.

நம்பிக்கை...
கடந்த 1920ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் அதிக அளவிலான வெப்ப நிலையாக 39.4 டிகிரி சென்டிகிரேட் பதிவாகியிருந்தது. ஆனால் இந்த முறை அந்த அளவுக்கு வெயில் இருக்காது என்று நம்பலாம் என்றார் அவர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications