அனைவருக்கும் வணக்கம், உங்களுடன் இருப்பது 'மகிழ்ச்சி'...தமிழில் பேசி அசத்திய மோடி!
தினத்தந்தி பவளவிழா நிகழ்ச்சியில் அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் தனது பேச்சைத் தொடங்கி பிரதமர் நரேந்திர மோடி அரங்கில் இருந்தவர்களின் கைத்தட்டல்களைப் பெற்றார்.
Recommended Video

சென்னை : தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்று சிறப்பு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் தனது உரையைத் தொடங்கினார். பிரதமர் தமிழில் பேசியதற்கு அரங்கில் இருந்தவர்கள் கைத்தட்டல்களை அளித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி எந்த மாநலம் அல்லது நாட்டிற்கு செல்கிறாரோ அந்த நாடு, மாநில மொழியில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் சென்ற போதும் கூட தன்னுடைய நிகழ்ச்சிகள் குறித்த அப்டேட்களை சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் போட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில் சென்னை விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி முதலில் கனமழையால் தமிழகம், சென்னையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார். கனமழைக்கான உதவிகளுக்கு தமிழக அரசுடன் எப்போதும் மத்திய அரசு துறை நிற்கும் என்று கூறிய அவர், மூத்த பத்திரிக்கையாளர் மோகன் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்தார்.
இதனையடுத்து நிகழ்ச்சி பேரூரையாற்றத் தொடங்கிய மோடி, அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் தன்னுடைய பேச்சைத் தொடங்கினார். தொடர்ந்து தந்தியின் 75வது விழாவில் உங்களுடன் இங்கிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் தமிழில் தனது உரையைத் தொடங்கியதையடுத்து அரங்கில் இருந்த சிறப்பு விருந்தினர்கள் அவருக்கு கைதட்டல்களை பரிசாகத் தந்தனர். இதே போன்று தன்னுடைய உரையை முடிக்கும் போது வணக்கம் என்று கூறி பிரதமர் தன்னுடைய உரையை நிறைவு செய்தார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications