பணிச்சுமை.. கணவர், குழந்தைகளிடம் பேச முடியலை.. சென்னை பெண் ஆய்வாளர் பகிரங்கமாக தற்கொலை மிரட்டல்
பணிச்சுமையால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாட்ஸ் ஆப்பில் கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் மிரட்டல் விடுத்துள்ளார்.
சென்னை : பணிச்சுமை காரணமாக குடும்பத்தினரை கூட பார்க்க முடியவில்லை என்பதால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் வாட்ஸ் ஆப்பில் மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீழ்ப்பாக்கம் தலைமை செயலக குடியிருப்பு காலனி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி. இவர் இன்று காலை காவலர்களுக்கான வாட்ஸ் ஆப் குரூப்பில் ஒரு ஆடியோவை அனுப்பியுள்ளார்.

அந்த ஆடியோவில் ராஜேஸ்வரி கூறுகையில் பதவிக்காகவும், பணத்துக்காகவும் மட்டுமே இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு தங்களிடம் எவ்வாறு வேலை வாங்குவது என தெரியவில்லை. அவர்களது நோக்கம் பதவி போய்விடுமோ என்ற பயம்தான்.
கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாத அதிகாரிகள் மத்தியில் நாங்கள் தவித்து கொண்டிருக்கிறோம். வீட்டிலும் சரி பணியிடத்திலும் சரி நிம்மதி இல்லை. நான் மட்டுமே எனது இறுதி முடிவை தேடி கொள்ள போகிறேன். என்னுடைய மரணமாவது சகோதர, சகோதரிகளுக்கு ஒரு விடிவுகாலமாக இருக்கட்டும்.
பணிச்சுமையால் தற்கொலைச் செய்யப்போவதாக பெண் ஆய்வாளர் மிரட்டல் – வைரலாகும் WhatsApp ஆடியோ pic.twitter.com/BKr6YJue8w
— Polimer News (@polimernews) January 7, 2018
பணிச்சுமையால் என் கணவர், குழந்தைகளுடன் பேசுவதற்கு கூட நேரமில்லை என்று
அந்த ஆடியோவில் ராஜேஸ்வரி கூறியுள்ளார். இந்த ஆடியோவை அனுப்பிய ராஜேஸ்வரி உறவினர் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications