மதுரை மேடையில் பொன்னியின் செல்வன்.. ரசிகர்கள் அமோக வரவேற்பு..
மதுரை: மதுரையில் நடைபெறும் பொன்னியின் செல்வன் தமிழ் வரலாற்று நாவல் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துபோயுள்ளன.
சோழ சாம்ராஜ்யம் குறித்த வரலாற்று புதினமாக, 1950களில் வெளியானது 'பொன்னியின் செல்வன்' நாவல். பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த புத்தகம், தமிழகத்தின் அனைத்து புத்தக கண்காட்சிகளிலும் அதிகப்படியாக விற்பனையாகும் வரலாற்று நாவலாக சாதனை படைத்து வருகிறது.

வீரம், காதல், நகைச்சுவை, அன்பு, அறிவு, அரசியல், திடுக்கிடும் திருப்பங்கள் என வாசகர்களை கட்டிப்போடும் அத்தனை அம்சங்களும், உண்மையான வரலாற்று செய்திகளுடன், இணைந்துள்ளதால், புத்தகத்தின் மீதான ஈர்ப்பு தமிழ் வாசகர்களுக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நாவலின் சுவாரசியத்தால் ஈர்க்கப்பட்ட கமலஹாசன் இதை திரைப்படமாக எடுக்க விளைந்ததாகவும், ஆனால், பட்ஜெட் கருதி அந்த திட்டத்தை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மிகவும் பிரமாண்டமான இந்த நாவலை திரைப்படமாகவோ அல்லது மேடை நாடகமாகவோ எடுக்க பட்ஜெட் பெரும் பிரச்சினையாக இருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு வீணாகிவந்தது. இந்நிலையில், எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் நிறுவனம் தயாரிப்பில் மதுரை கே.கே.நகர், லட்சுமி சுந்தரம் ஹாலில் இன்று முதல் மூன்று நாட்கள் மேடையில் பொன்னியின் செல்வன் நாடகம் காண்பிக்கப்படுகிறது.
இன்று ஸ்பான்சர்களுக்காக நாடகம் அரங்கேற்றப்படுவதாகவும், நாளையும், அதற்கு மறுநாளும் பொதுமக்கள் பார்வைக்கு நாடகம் திரையிடப்படும் என்றும் மண்டப நிர்வாகிகள் தெரிவித்தனர். மொத்தம் 786 இருக்கை கொண்ட இந்த மண்டபத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகிவிட்டனவாம். மாலை 6 மணிக்கு துவங்கும் இந்த நாடகம், மூன்றரை மணி நேரம் காண்பிக்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக கோவையிலும் நாடகம் மேடையேற உள்ளது.
பொன்னியின் செல்வனுக்கு கிடைக்கும் வரவேற்புகள், தொலைக்காட்சி நெடுந்தொடர்களாக அதை தயாரிக்க பிறருக்கு ஊக்கம் கொடுக்கும் என்று நம்பலாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications