மழை நீர் முழுவதும் வடிந்த பின்னரே மின்சார சப்ளை: மின் வாரியம்
சென்னை: சென்னையில் தேங்கி நிற்கும் மழைநீர் வெளியேற்றப்பட்டவுடன் எல்லா இடங்களிலும் மின்சார சப்ளை வழங்கப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கையினால் சென்னையில், மின் வினியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளநீர் புகுந்த துணை மின்நிலையங்களில் மற்ற மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு, குறைந்த மற்றும் உயரழுத்த மின் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள 24,715 மின் வினியோக மின்மாற்றிகளில் 24,452 மின்மாற்றிகள் புனரமைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்படுகிறது. 63,686 மின் வினியோக பெட்டிகளில் 63,172 மின் வினியோக பெட்டிகள் மூலம் மின் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களான சென்னை தொலைபேசி மற்றும் இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடந்த 5 மற்றும் 6 ஆம் தேதிகளிலேயே மின் வினியோகம் வழங்கப்பட்டது. மழைநீர் தேங்கியுள்ள வீதிகளில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துடன் இணைந்து மழைநீர் வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
தேங்கி நிற்கும் மழைநீர் வெளியேற்றப்பட்டவுடன் எல்லா இடங்களிலும் மின்சாரம் வழங்கப்படும். மேற்படி சீரமைப்பு பணிகள் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மின்வாரிய பணியாளர்கள் மற்றும் மின்சாதனங்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications