தாது மணல் கொள்ளையில் தமிழக அரசின் நடவடிக்கை வெறும் கண்துடைப்பு: பிரேமலதா
தூத்துக்குடி: கனிம கொள்ளையில் யார் ஈடுபட்டாலும், உடந்தையாக இருந்தாலும் எதிர்த்து போராடி தண்டனை பெற்று தர வேண்டும். இறைவன் கொடுத்த கனிம வளத்தை திருடுவதிலும், மக்களை கொல்வதும் ஒன்றுதான் என்று பிரேமலதா கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் நடந்த தேமுதிக 9வது ஆண்டு துவக்க விழா பொது கூட்டத்தில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசியதாவது:
துரோகிகளை பற்றி தேமுதிகவுக்கு அச்சமில்லை. நமது நீர் நிலைகள் பராமரிக்கப்படாமல் தூர்த்து போய் கிடக்கின்றன. மக்களுக்கு எது தேவை என திட்டம் தெரியாத தலைவர்களே இதுவரை தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகின்றனர். மக்கள் பணத்தில் தண்ணீர் பாட்டில் மூலம் அரசு இலவச விளம்பரம் செய்து வருகிறது.

தூத்துக்குடி வந்தது முதல் வைகுண்டராஜன், வைகுண்டராஜன் என்றே பேசுகிறார்கள். அவர் வஉசி பேரனா, கட்டபொம்மன் வரிசா, வாஞ்சிநாதன் பரம்பரையா, அல்லது சுதந்திர போராட்ட தியாகி குடும்பமா இதில் எதுவும் இல்லை.
கடவுள் கொடுத்த கனிம வளத்தை பாதுகாப்பது தாயை பாதுகாப்பதற்கு சமம். ஒரு பக்கம் மணல், ஒரு பக்கம் கிரானைட், ஒரு பக்கம் தாது மணல் மாபியாக்கள் பிடியில் தமிழகம் சிக்கி தவிக்கிறது.
நெல்லை, தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களில் தாது மணலை அள்ளி கப்பலில் ஏற்றி அதனை பல லட்சம் கோடிக்கு மோசடி செய்தது இங்குள்ள மபியா கும்பல். இது போன்ற கனிம வள கொள்ளையை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும்.
தூத்துக்குடியில் சில மீனவ அமைப்புகள் மட்டும் போராடி வருகின்றன. அனைவரும் போராட வேண்டும். அவர்களுக்கு தேமுதிக துணை நிற்கும். கனிம கொள்ளையில் யார் ஈடுபட்டாலும், உடந்தையாக இருந்தாலும் எதிர்த்து போராடி தண்டனை பெற்று தர வேண்டும்.
இறைவன் கொடுத்த கனிம வளத்தை திருடுவதிலும், மக்களை கொல்வதும் ஒன்றுதான். தற்போது நடந்த ஆய்வு வேறும் கண்துடைப்புதான். தூத்துக்குடி மாவட்டத்தில் 15 சதவீதம், நெல்லை மாவட்டத்தில் 65 சதவீதம், கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 சதவீதம் தாது மணல் கொள்ளை போய் உள்ளது.
தாது மணல் கொள்ளையை வெளிச்சதுக்கு கொண்டு வந்த ஆசிஷ்குமார், கிரானைட் கொள்ளையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த சகாயம் போன்ற நல்ல கலெக்டர் அதிகம் வரவேண்டும். அவர்களுக்கு நாம் துணை நிற்போம்.
அரசு இனியும் இந்த விவகார்தில் கண்துடைப்பில் ஈடுபட வேண்டாம். உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலை மக்கள் மனதில் கொள்ள வேண்டும். யார் சொன்னாலும் அப்படியே நம்பி விட கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications