ரபேல்: மத்திய அரசு இனியும் மௌனம் காக்க கூடாது.. கமல்ஹாசன் கருத்து
ரபேல் ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு மேலும் மௌனம் காக்க கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ரபேல் ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு மேலும் மௌனம் காக்க கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அரசுடன் செய்த ரபேல் விமான ஒப்பந்தம் மூலம் பாஜக ஊழல் செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து பாஜக அரசு வாங்கிய ரபேல் ரக விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

இதில் 12 ஆயிரம் கோடி இழப்பும், பல ஆயிரம் கோடி ஊழலும் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதில் ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி பெயர் சிக்கி இருக்கிறது.
இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். அரசு இதுகுறித்து விளக்கம் வேண்டும் என்றுள்ளார்.
அதில், ரபேல் ஒப்பந்தம் பற்றி அரசு தனது மௌனத்தை கலைக்க வேண்டும். ஒப்பந்தத்தை பற்றி உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அரசு தவறு செய்ததாக நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை. ஆனால் எல்லோருக்கும் அந்த சந்தேகம் உள்ளது. மக்களின் சந்தேகத்தை அரசு போக்க வேண்டும். இதில் வெளிப்படைத்தன்மையை அரசு கடைபிடிக்க வேண்டும்.
ஒப்பந்தத்தின் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். பிரதமர் மோடி இதில் அமைதியாக இருக்க கூடாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications