பகலில் ஓய்வு.. இரவில் மீண்டும் சென்னையில் பலத்த மழை.. வெள்ளக்காடு!
சென்னையில் பகலில் ஓய்ந்திருந்த மழை மீண்டும் வெளுத்து கட்ட தொடங்கியிருக்கிறது.
சென்னை: சென்னையில் பகல் முழுவதும் ஓய்வு எடுத்து வந்த மழை தற்போது மீண்டும் வெளுத்து கட்டி வருகிறது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பெரிய அளவில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த நான்கு நாட்களாக கனமழை தொடருகிறது. நேற்று பிற்பகல் தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்தது. இன்று காலையில் இருந்து கொஞ்சம் பெய்யாமல் இருந்த மழை தற்போது மீண்டும் ஆரம்பித்து இருக்கிறது
நேற்று இரவு போல் இன்றும் சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இரவு முழுக்க இந்த மழை தொடரும் என்ற அச்சத்தில் மக்கள் தவித்து வருகின்றனர்.

ஓய்வு எடுத்த மழை
நேற்று பெய்த மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இன்று காலை முதல் மழை எட்டிப்பார்க்கவில்லை. காலையில் இருந்து சில இடங்களில் வெயிலும் அடித்தது.

புறநகர்களில் வெள்ளம்
இதனால் சில பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள உதவியாக இருந்தது. எனினும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. பெரும்பாலான இடங்களில் தேநீர் தேங்கி மக்களுக்கு சிரமத்தை உருவாக்கியது. இந்த பகுதிகளை இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்வை இட்டார்.

கனமழை கொட்டுகிறது
தற்போது தியாகராயர் நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மயிலாப்பூர்,குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி வருகிறது.கன மழை காரணமாக ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விடிய விடிய மழையா?
இக்கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்றைப் போலவே இன்றும் விடிய விடிய கனமழை கொட்டுமோ என்கிற அச்சம் சென்னைவாசிகளிடத்தில் ஏற்பட்டுள்ளது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications