வரிசையாக மூடப்படும் 'மெக் டொனால்ட்ஸ்' கடைகள்.. மிரள வைக்கும் பின்னணி என்ன?
வட இந்தியாவில் இருக்கும் 'மெக் டொனால்ட்ஸ்' உணவகங்கள் பல வரிசையாக மூடப்பட்டு வருகிறது.
சென்னை: வட இந்தியாவில் இருக்கும் 'மெக் டொனால்ட்ஸ்' உணவகங்கள் பல வரிசையாக மூடப்பட்டு வருகிறது. இந்த ஜனவரி மாதத்திலும் இன்னும் நிறைய கடைகள் மூடப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.
வட இந்தியாவில் 'மெக் டொனால்ட்ஸ்' நிறுவனத்திடம் ஒப்பந்த செய்து இருக்கும் விக்ரம் பாக்க்ஷி என்ற நபருக்கும் ராதா கிருஷ்ணன் புட் லேண்ட் என்ற நிறுவனத்திற்கும் இடையில் நடக்கும் பிரச்சனை காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஆனால் 'மெக் டொனால்ட்ஸ்' நிறுவனமே இதன் காரணமாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி சில குறிப்பிட்ட 'மெக் டொனால்ட்ஸ்' கடைகளை குறிப்பிட்டு இனி அந்த கடைகளில் சாப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளது.

பெரிய நிறுவனம்
உலகின் பல இடங்களில் இருக்கும் பிரபல உணவகம் 'மெக் டொனால்ட்ஸ்'. சென்னையில் இருக்கும் மால்களில் தொடங்கி வடகிழக்கு இந்தியாவில் இருக்கும் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் இவர்கள் தங்கள் கிளைகளை வைத்து இருக்கிறார்கள். மேலும் இந்தியாவின் முன்னணி உணவகத்தில் ஒன்றாக 'மெக் டொனால்ட்ஸ்' திகழ்கிறது

என்ன முறை
எல்லா இடங்களிலும் கடைகள் இருந்தாலும் எல்லா கடைகளையும் 'மெக் டொனால்ட்ஸ்' நிறுவனம் நேரடியாக இயக்காது. இதற்காக இந்தியா முழுக்க ஒவ்வொரு பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் டீலர்கள் இருக்கிறார்கள். அந்த டீலர்கள் மூலம் கடையை விருப்பம் உள்ள நபர்களுக்கு கொடுத்து நடத்த வைப்பார்கள். உணவுப் பொருட்கள் மட்டும் 'மெக் டொனால்ட்ஸ்' நிறுவனத்திடம் வாங்கப்படும்.

மூடப்பட்டது
இந்த நிலையில் டெல்லியில் கடந்த வாரம் ஒரே நாளில் 84 'மெக் டொனால்ட்ஸ்' உணவகங்கள் மூடப்பட்டது. இந்த விஷயம் உலகம் முழுக்க பேசப்பட்டது. மேலும் வடகிழக்கு இந்தியாவில் இருக்கும் சில 'மெக் டொனால்ட்ஸ்' உணவகங்களில் சாப்பிட வேண்டாம் என 'மெக் டொனால்ட்ஸ்' நிறுவனமே பேட்டி அளித்து இருந்தது. இந்த மாதம் இன்னும் நிறைய 'மெக் டொனால்ட்ஸ்' உணவகங்கள் மூடப்பட உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது.

பிரச்சனை என்ன
'மெக் டொனால்ட்ஸ்' நிறுவனத்தின் டீலர்களில் முக்கியமானவராக இருக்கிறார் விக்ரம் பாக்க்ஷி. இவருக்கும் ராதா கிருஷ்ணன் புட் லேண்ட் என்ற நிறுவனத்திற்கும் இடையில் சில காலத்திற்கு முன் பிரச்சனை உருவாகி இருக்கிறது. இவர்கள் அளிக்கும் உணவு தரமாக இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மெக் டொனால்ட்ஸ்க்கும் விக்ரமிற்கும் கூட இதனால் பிரச்சனை வந்துள்ளது. இதுவே கடைகள் மூடப்படுவதற்கு காரணம் என்று கூறப்பட்டு உள்ளது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications