3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க ரூ.60 கோடி ஒதுக்கீடு: செங்கோட்டையன் அறிவிப்பு
3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
கோபிச்செட்டி பாளையம்: 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோருக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பள்ளிக்கல்வித்துறையில் மாதம் 2 புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.












Click it and Unblock the Notifications