சேலம் சாலை: நிலம் கையகப்படுத்துவது பற்றி மக்களிடம் அறிவிக்காதது ஏன்.. சென்னை ஹைகோர்ட் விளாசல்!
சேலம் - சென்னை 8 வழி சாலைக்கு நிலம் எடுப்பது குறித்து மக்களுக்கு அரசு அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை, இது தவறான விஷயம் என்று சென்னை ஹைகோர்ட் கண்டித்துள்ளது.
கோவை: சேலம் - சென்னை 8 வழி சாலைக்கு நிலம் எடுப்பது குறித்து மக்களுக்கு அரசு அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை, இது தவறான விஷயம் என்று சென்னை ஹைகோர்ட் கண்டித்துள்ளது.
சேலம் - சென்னை 8 வழி சாலை அமைக்கப்பட வேலைகள் நடந்து வந்தது. இந்த சாலை போடப்படும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்தே மக்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள்.

இந்த சாலைக்கு எதிராக போராடும் மக்கள், போராளிகள், அரசியல் வாதிகள் என்று எல்லோரும் கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில்தான் இதற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள், தருமபுரி எம்.பி. அன்புமணி ராமதாஸ், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடந்தது.
அதில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைக்கு நிலம் எடுப்பதை காரணம் காட்டி நில உரிமையாளர்களை கட்டாயப்படுத்தி அகற்ற கூடாது.
மறுஉத்தரவு வரும் வரை இதை பின்பற்ற வேண்டும் என்றுள்ளனர். இந்த உத்தரவிற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிடும் முன், நீதிபதிகளை அரசை கடுமையாக கண்டித்தார்கள்.
சேலம் சாலை தொடர்பாக நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீசில் திட்டத்தின் சிறப்புகள் மட்டும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கையப்படுத்துவதற்கு தொடர்பான குறிப்புகள் இல்லை. இதை அறிந்த நீதிபதிகள், அரசு மக்களுக்கு இந்த தகவலை தெரிவிக்காதது ஏன், இதை தெரிவிக்காமல் நிலத்தை எடுப்பது தவறு என்று கண்டிப்பு காட்டினார்கள்.
இதையடுத்து இதில் அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளனர். மேலும் மறுஉத்தரவு நிலத்தில் அதன் உரிமையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications