சேலம் சாலை: நிலம் கையகப்படுத்துவது பற்றி மக்களிடம் அறிவிக்காதது ஏன்.. சென்னை ஹைகோர்ட் விளாசல்!
சேலம் - சென்னை 8 வழி சாலைக்கு நிலம் எடுப்பது குறித்து மக்களுக்கு அரசு அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை, இது தவறான விஷயம் என்று சென்னை ஹைகோர்ட் கண்டித்துள்ளது.
கோவை: சேலம் - சென்னை 8 வழி சாலைக்கு நிலம் எடுப்பது குறித்து மக்களுக்கு அரசு அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை, இது தவறான விஷயம் என்று சென்னை ஹைகோர்ட் கண்டித்துள்ளது.
சேலம் - சென்னை 8 வழி சாலை அமைக்கப்பட வேலைகள் நடந்து வந்தது. இந்த சாலை போடப்படும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்தே மக்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள்.

இந்த சாலைக்கு எதிராக போராடும் மக்கள், போராளிகள், அரசியல் வாதிகள் என்று எல்லோரும் கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில்தான் இதற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள், தருமபுரி எம்.பி. அன்புமணி ராமதாஸ், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடந்தது.
அதில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைக்கு நிலம் எடுப்பதை காரணம் காட்டி நில உரிமையாளர்களை கட்டாயப்படுத்தி அகற்ற கூடாது.
மறுஉத்தரவு வரும் வரை இதை பின்பற்ற வேண்டும் என்றுள்ளனர். இந்த உத்தரவிற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிடும் முன், நீதிபதிகளை அரசை கடுமையாக கண்டித்தார்கள்.
சேலம் சாலை தொடர்பாக நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீசில் திட்டத்தின் சிறப்புகள் மட்டும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கையப்படுத்துவதற்கு தொடர்பான குறிப்புகள் இல்லை. இதை அறிந்த நீதிபதிகள், அரசு மக்களுக்கு இந்த தகவலை தெரிவிக்காதது ஏன், இதை தெரிவிக்காமல் நிலத்தை எடுப்பது தவறு என்று கண்டிப்பு காட்டினார்கள்.
இதையடுத்து இதில் அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளனர். மேலும் மறுஉத்தரவு நிலத்தில் அதன் உரிமையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications