டெல்டா மாவட்டத்தில் தொடரும் கனமழை... திருவாரூரில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நாசம்!
டெல்டா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து கனமழையால் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் : வடகிழக்குப் பருவமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
வடகிழக்குப் பருவமழை கடந்த 4 நாட்களாக சென்னை, கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகர்ப்பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்குவதால் மக்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை வட்டத்திற்குட்பட்ட கோடங்குடி, மறையூர், ஊர்குடி, அகரகீரங்குடி, நீடுர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் நெற்கயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளனர்.
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் டெல்டா மாவட்டத்தில் சம்பா பயிர்கள் பயிடப்பட்டன. மயிலாடுதுறையில் மட்டும் சுமார் 20 ஹெக்டேர் நிரபப்பரப்பில் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதே போன்று தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
திருவாரூர் மாவட்டம் மணவாளன் பேட்டையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சம்பா பயிர்களை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருவாரூர் மாவட்டதத்தில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications