மோடியை சந்திக்கிறார் சசிகலா புஷ்பா! ஜெ. மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரிக்கை!!
டெல்லி: அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்றும் சசிகலா நடராஜனின் முயற்சிகளை முறியடிக்கும் வியூகங்களுடன் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து திடீரென அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா நடராஜன் முயற்சித்து வருகிறார். அதேபோல் அமைச்சர்களைத் தூண்டிவிட்டு சசிகலாதான் முதல்வராக வேண்டும் எனவும் முழக்கம் எழுப்பப்படுகிறது.

சசிகலா புஷ்பா எதிர்ப்பு
இந்த முயற்சிகளுக்கு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சசிகலா நடராஜன் அதிமுக பொதுச்செயலராவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

பிரணாப், ராஜ்நாத்துடன் சந்திப்பு
இதனிடையே டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரை நேரில் சந்தித்தார் சசிகலா புஷ்பா. அப்போது ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி மனுக்களைக் கொடுத்திருந்தார் சசிகலா புஷ்பா.

பிரதமர் அலுவலகம் அழைப்பு
இதேகோரிக்கையுடன் பிரதமர் மோடியை சந்திக்கவும் நேரம் கேட்டிருந்தார் சசிகலா புஷ்பா. சென்னையில் இருந்த சசிகலா புஷ்பாவுக்கு நேற்று முன்தினம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா இருந்தார்.

மோடியுடன் சந்திப்பு
இதையடுத்து தற்போது டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் சசிகலா புஷ்பா. பிரதமர் மோடியிடம் சசிகலா நடராஜனின் வியூகங்கள், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து சசிகலா புஷ்பா விரிவாக விவரிக்க இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications