சந்தேகத்தை எழுப்பும் சசிகலாவின் திடீர் ‘நீண்ட மவுன விரதம்’!
ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ள நிலையில் சசிகலா சிறைக்குள் மவுன விரதம் மேற்கொண்டிருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
Recommended Video

சென்னை: ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ள நிலையில் சசிகலா சிறைக்குள் மவுன விரதம் மேற்கொண்டிருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கு தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.

ஆறுமுகசாமி கமிஷன்
இந்த விசாரணை கமிஷன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் உறவினர்களிடமும் ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது.

சசிகலாவுக்கு சம்மன்
இந்த நிலையில் விசாரணை கமிஷன் சார்பில் சசிகலாவுக்கு கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 நாளில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறை அதிகாரிகள் மூலம்
பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறை அதிகாரிகள் மூலம் முறைப்படி சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதே போல் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, அவரது மகள் பிரீத்தாரெட்டி ஆகியோருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பி உள்ளார்.

சசிகலா மவுன விரதம்
இந்நிலையில் சசிகலா பெங்களூரு சிறையில் மவுன விரதம் இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலாவை இன்று சிறையில் சந்தித்த தினகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

முந்திக்கொண்டு சொன்ன தினகரன்
அப்போது ஜெயலலிதா நினைவு நாள் முதல் சசிகலா மவுன விரதம் மேற்கொண்டிருப்பதாகவும் இந்த மவுன விரதம் ஜனவரி மாதம் இறுதி வரை நீடிக்கும் என்றும் அவர் கூறினார். இதன் காரணமாக சசிகலா எதுவும் பேசவில்லை என்றும் தான் பேசியதைதான் அவர் கேட்டுக்கொண்டார் என்றும் டிடிவி தினகரன் முந்திக்கொண்டு தெரிவித்தார்.

சம்மன் - நீண்ட மவுனவிரதம்
ஆறுமுக சாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ள நிலையில் சசிகலா மவுன விரதம் இருப்பதாக தினகரன் தற்போது தெரிவித்துள்ளார். 15 நாட்களில் விளக்கமளிக்க கமிஷன் உத்தரவிட்டுள்ள நிலையில் ஜனவரி மாதம் இறுதி வரை சசிகலாவின் மவுன விரதம் நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சந்தேகத்தை எழுப்பும் விரதம்
அதன்படி பார்த்தால் கிட்டதட்ட 2 மாதங்கள் சசிகலா மவுன விரதம் மேற்கொள்ளவுள்ளார். விசாரணை கமிஷனுக்கு அஞ்சி சசிகலா இந்த நீண்ட மவுன விரதத்தை மேற்கொண்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது












Click it and Unblock the Notifications