தூத்துக்குடி வந்த பனாமா கப்பலில் சேட்டிலைட் போன் - அதிகாரிகள் தீவிர விசாரணை
தூத்துக்குடி: பாகிஸ்தானில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கப்பலில் தடை செய்யப்பட்ட நவீன சேட்டிலைட் போன் பிடிப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குடப்பட்ட தூத்துக்குடி கடல் பகுதிக்குள் அரசால் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் பயன்படுத்தப்படுவதாக இந்திய சாட்டிலைட் கட்டுபாட்டு மையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய உளவுத்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.
இதை தொடர்ந்து உளவுத்துறையினர், கடலோர காவல் படையினர், கியூ பிரிவு போலீசார், மரைன் போலீசார் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சென்றனர். அங்கு நின்ற பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட எம்.வி நோர்கா என்ற கப்பலில் சோதனையிட்டனர்.
இந்த கப்பல் பாகிஸ்தான் துறைமுகமான கராச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு வந்திருந்தது. தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பயன்படுத்தபடும் முக்கிய எரிபொருளான நப்தா இதில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கப்பலில் அதிகாரிகள் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். இதில் அங்கு ஒரு சாட்டிலைட் போன் இருப்பது தெரிய வந்துள்ளது.
சாதாரணமாக வீடுகளில் பயன்படுத்தப்படும் போன்களை போன்று ரீசிவர் மற்றும் கன்சோலுடன் கூடிய அந்த சாட்டிலைட் போனை சுங்கதுறையினர் பறிமுதல் செய்தனர். அரபு நாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ள அந்த போன்களால் உலகின் எந்த மூலையில் இருந்தும் எந்த நபர்களுடனும தொடர்பு கொள்ளலாம். இதன் எண் எந்த போனிலும் பதிவாகாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சட்ட விரோத செயல்களுக்கும், தீவிரவாதிகளும் பயன்படுத்த கூடும் என்பதால் இந்தியா இதை முற்றிலும் தடை செய்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த வகை போனை வைத்து யாருடன் பேசலாம். சாதாரண போனை போன்று இதனை கண்டுபிடிக்க முடியாது. துறைமுகத்தில் இந்த போனை உபயோகித்து கப்பல் ஊழியர் பேச முயன்றுள்ளார். அப்போதுதான் இது கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்தனர்.
இது தொடர்பாக சாட்டிலை போனை வைத்திருந்த கப்பல் கேப்டன் குரோஷியா நாட்டை சேர்ந்த சுர்ஷத் மாஸ்க் மற்றும் அதில் பணியாற்றும் 22 ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications