மாயமான 'டோர்னியர்' விமானத்தின் கறுப்பு பெட்டி சென்னை வந்தது- மர்மம் விலகுமா?
சென்னை: காணாமல் போன டோர்னியர் ரக விமானத்தின் கறுப்புப் பெட்டி சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஒத்திகைக்காக சென்ற இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் ரக குட்டி விமானம் கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி சிதம்பரம் கடல் பகுதியில் 16 கடல் மைல் தூரத்தில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென்று மாயமானது.

விமானத்தில் பயணம் செய்த வித்யாசாகர், எம்.கே.சோனி, சுபாஷ் சுரேஷ் ஆகிய விமானிகளும் அதில் மாயமானார்கள். இதையடுத்து, கடலோர காவல்படை, இந்திய கடற்படை மற்றும் தமிழக கடலோர காவல்படையும் சேர்ந்து மாயமான விமானத்தையும், விமானிகளையும் தேடி வந்தன.
ஒரு மாதத்திற்கும் மேலான தேடுதல் வேட்டையின் பலனாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் பிச்சாவரம் அருகே ஆழ்கடலில் கிடப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த விமானத்தின் கறுப்புப் பெட்டியை கரைக்கு கொண்டு வரப் பட்டு, பின்னர் அது ஆய்வுக்காக சென்னை கொண்டு வரப்பட்டது
அதனை ஆய்வு செய்ய பெங்களூரில் உள்ள, 'இந்துஸ்தான் ஏரோடைனமிக்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர் குழு ஒன்றும் சென்னை வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலுக்கு அடியில், 30 நாட்களுக்கும் மேலாக கிடந்ததால் கறுப்பு பெட்டியின் நிலைமை எப்படி இருக்கிறது என்பது நிபுணர் குழுவின் ஆய்வில் தெரிய வரும். அதன் பின்னரே, கறுப்பு பெட்டியை, 'டி - கோடு' செய்ய, எங்கு அனுப்புவது என்பது பற்றி முடிவு செய்யப்படும் என கடலோரக் காவல்படை அதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்தக் கறுப்பு பெட்டியின் மூலமாகவே டோர்னியர் விமானம் எவ்வாறு விபத்தில் சிக்கியது, அதில் பயணம் செய்த விமானிகளின் நிலைமை என்ன என்பது குறித்து பல உண்மைகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப் படுவது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, மாயமான விமானத்தில் பயணம் செய்த விமானிகளைத் தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications