குற்றால சீசன் தாமதம்… சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்... புலம்பும் வியாபாரிகள்
குற்றாலம்: அருவி நகரம் என்றழைக்கப்படும் குற்றாலத்தில் இன்னும் சீசனுக்கான அறிகுறியே தென்படவில்லை. வெறும் பாறை தாங்க இருக்கு தண்ணீ வரலையே என்பது குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளின் புலம்பலாக உள்ளது. கடைகளை ஏலம் எடுத்த வியாபாரிகளோ சீசன் விரைவில் தொடங்க வருணபகவானை வேண்டிக்கொண்டுள்ளனர்.
தென்மேற்கு பருவ மழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை இங்குள்ள பேரருவி, தேனருவி, செண்பகா தேவி அருவி, புலி அருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி ஆகிய வற்றில் ஆனந்தமாக கூட்டம் குவியும். கடந்த ஆண்டு ஜூன் முதல்தேதியே சீஸன் பிரமாதமாக தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு பருவ மழை தாமதத்தால் இன்னமும் குற்றாலத்தில் சீஸனுக்குரிய அறிகுறியே தெரிய வில்லை. இதனால் அங்கு கடையை ஏலம் எடுத்த வியாபாரிகள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

ஏற்பாடுகள் தயார்
இந்த ஆண்டுக்கான சீஸனுக்காக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம், காவல்துறை ஆகிய அரசுத் துறைகள் இணைந்து பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்திருக்கின்றன. குற்றாலத்தில் அருவிப் பகுதிகள், சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

வியாபாரம் எப்படியோ?
குற்றாலம் பகுதியில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே வியாபாரம் இருக்கும் குற்றாலநாதர் கோயிலுக்கு சொந்தமான சன்னதி பஜார், வடக்கு சன்னதி, ரத விதிகள் போன்ற பகுதிகளில் 120 நாட்களுக்கு ஏலம் விடப்படுகிறது. ஆனாலும் மொத்தம் 75 நாட்கள் மட்டுமே அதிக அளவில் வியாபாரம் நடைபெறும். சீசனை நம்பி குற்றாலம் சன்னதி பஜாரில் 10 அடி நீளம், 10 அடி அகலத்தில் ஒரு கடையை அதிகபட்சமாக ரூ.1 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளனர். சீசன் துவங்காமல் உள்ளதால் ஏலம் எடுத்த வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.

வாகன நிறுத்த கட்டணம்
குற்றாலம் ரத வீதி பகுதிகளில் வாகன நிறுத்தம் பகுதியை ஏலம் விடுவது வழக்கம். இந்தாண்டு அந்த பகுதியை ரூ.39 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளனர். ஆனால் இந்தாண்டு சீசன் தாமதம் அதிக வசூல் செய்வதில் போலீசாரின் கண்டிப்பு போன்ற காரணங்களால் இந்தாண்டு ஏலத்தை ரூ.20 லட்சத்திற்கு மேல் யாரும் கேட்கவில்லை. இதனால் ஏலம் நடைபெறுவது ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.

காற்று வாங்கும் வியாபாரிகள்
பேரூராட்சி சார்பில் விடப்படும் கார் பார்க்கிங் ஏலமும் இன்னமும் விடப்படவில்லை. தற்காலிக கடைகளை அதிக வாடகைக்கு ஏலம் எடுத்தவர்கள் கடையை திறந்து வைத்து விட்டு காற்று வாங்கி கொண்டிருக்கின்றனர். மழை தொடங்கி அருவியில் தண்ணீர் வர வருண பகவானை வேண்டிக்கொண்டுள்ளனர் வியாபாரிகள்.
படங்கள்: சசி
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications